About

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday 6 March 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 15 & 16

கடந்த 23.2.2014 அன்று நிகழ்ந்த இரண்டு நிகழ்ச்சிகளும் சிறப்பாக இருந்தது. முதல் நிகழ்ச்சி ஆய்குடி சிவ சரஸ்வதி வித்யாலாவிலும், இரண்டவது நிகழ்ச்சி  ஆய்குடி அமர் சேவா சங்கத்திலும் நடந்தது. 
முதல் நிகழ்ச்சி: தென்காசி ஆய்குடி சிவ சரஸ்வதி வித்யாலா பள்ளிக்கூடம்
இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 42 மாணவ-மாணவியர் மிகவும் ஈடுபாடாகவும், ஆர்வமாகவும் கலந்துகொண்டனர். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது. இதில் நான், இந்தியாவில் உள்ள பலவகை வன உயிரினங்களை விளக்கும் வண்ணம் பலவகையான active learning tools ஐ பயன்படுத்தி நமது பலவகை விலங்குகளைப் பற்றி விளக்கினேன், பின்பு மழைக்காடுகள் பற்றிய வீடியோ மூலமாகவும், வண்ண அட்டைகள் மூலமாகவும் நமது சுற்றுச்சூழலின் முக்கியதுவத்தை சொன்னேன். 





மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக குழு கலந்துரையாடலும் நடத்தப்பட்டது. இதில் பலரும் பல புதிய தகவல்களை வழங்கி கைதட்டல்களைப் பெற்றனர். மேலும் அவர்களுக்குள்ளே புதைந்துள்ள படைப்பு திறன் மற்றும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்ததை இந்த மூன்று மணி நேரத்தில் கண் கூடாகக் காண முடிந்தது. கடைசியாக இரண்டு மாணவர்கள் இந்த நிகழ்ச்சி எவ்வாறு அவர்களுக்கு இருந்தது என்று அனைவரின் முன்பும் சொல்லி கைதட்டல்களை பெற்றனர். அங்குள்ள பள்ளி ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சிக்கு உதவினர். அப்படியே அமர்சேவா சங்கத்தின் நிர்வாகி திரு.ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்து விட்டு வந்தேன். அவர்களுக்கு என் நன்றிகள். இந்த மாணவர்களை மேலும் மேலும் ஊக்குவித்தால் நிச்சயம் இவர்களால் அறிவியலில் மிக சிறப்பான இடத்தை அடைய முடியும்.   

இரண்டவது நிகழ்ச்சி: வௌவால்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் புகைப்பட கண்காட்சி. 
இடம்: அமர் சேவா சங்கம், ஆய்குடி, தென்காசி.
இந்த நிகழ்ச்சி வௌவால்கள் புகைப்பட கண்காட்சியுடன் துவங்கியது. கண்காட்சியை திருமதி. G.S.விஜய லக்ஷ்மி அவர்கள் திறந்து வைத்து பேசிவிட்டு வௌவால்கள் படங்களை பார்த்து விட்டு சென்றனர்.  பின்பு நான் இந்த சங்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு வௌவால்கள் பற்றிய வகுப்பை துவக்கினேன். நான் இதில், வௌவால்கள் என்பவைகள் பாலுட்டி வகையை சேர்ந்தவைகள்; உலகத்தில் இவை மட்டும்தான் பறக்கும் பாலுட்டிகள்உலகில் நான்கில் ஒரு பங்கு பாலூட்டிகள் வௌவால் போன்ற செய்திகள் அல்லாமல் மேலும் கீழ் காணும் பலவித செய்திகளையும் மிக சுலபமாக புரியும் வண்ணம் விளக்கினேன். 





*** வௌவாலில் இரண்டு வகை உள்ளது, 1. பழம்தின்னி வௌவால்கள் 2. பூச்சிஉண்ணும் வௌவால்கள்
*** பூனையை போல இந்த வௌவால்கள் தன்னை தானே சுத்தம் செய்துகொள்ளும்
*** இந்த உலகில் சுமார் 50 மில்லியன் வருடமாக இந்த வௌவால்கள் உள்ளது. 
*** கடந்த சில வருடமாக வேகமா அழியும் காடுகளும், சாலையோர மரங்களும் இந்த வௌவால்கள் எண்ணிக்கை குறைவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. 
*** மேலும் பருவநிலை மாற்றமும், வாழிட அழிப்பும் (கோவில்களிலிருந்து வௌவால்கள் துரத்தத்படுதல்) ஒரு காரணமாகும் 
*** வௌவால்கள் கூட்டம் கூட்டமாக வாழும் சமுதாய விலங்கு. 
*** நாம் பெருமைப்படும் விஷயம் என்னவென்றால், நம்மிடையே இந்த வௌவால்கள் இருப்பதுதான். ஏனெனில் இந்த வௌவால்கள் மனிதனுக்கும், இந்த சூழலுக்கும் அதிகமான நன்மைகளை செய்கிறது.
*** இந்த வௌவால்கள் தன் எடையை விட மூன்று மடங்கு எடை உணவை உண்ணும்.
*** வௌவால்கள் முப்பது வருடம் வரை வாழும் 
*** Bumble Bee Bat, இது உலகத்திலே மிக சிறிய வௌவால். இது தீப்பெட்டிகுள் செல்லும் அளவு சிறியது. 
*** வயல்வெளிகள், விளைநிலங்கள், தோட்டம் போன்ற இடங்களில் உள்ள பூச்சிகளை பிடித்து உண்ணும். 
*** இந்த அதிசய பாலுட்டிகள் ஒரு மணிநேரத்துக்கு சுமார் 600 - 1000 பூச்சிகளை பிடித்து உண்ணும். 
*** இவை விதை பரவலிலும், மகரந்த சேர்க்கையிலும் மிகச் சிறப்பான பங்கு வகிக்கிறது.
*** பல நாடுகளில் வௌவால்கள் நல்ல சகுனத்தின் அடையாளமாக உள்ளது
*** உலகில் உள்ள பெரிய வௌவாலின் இறக்கை அளவு ஆறு அடி ஆகும் 
*** உலகத்தில் மொத்தம் 1116 வகை வௌவால்கள் உள்ளது, அதில் 117 வௌவால்கள் இந்தியாவில் உண்டு. 

இந்த குழந்தைகளுக்கு காட்டுயிர் மற்றும் உலகின் பெரிய வௌவால் வீடியோவை காட்டினேன். அவர்களில் பலபேர் என்னிடம் சொன்னார்கள், நீங்கள் வகுப்பில் பேசியதைவிட வீடியோ மூலமாக சொன்னவை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது என்று. இந்த மாணவ மாணவிகள் பலரும் மிகச் சிறப்பான உற்று நோக்கும் திறம் உள்ளது. 
கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை சூழல் மேல் அக்கறை உள்ள சிறந்த குழந்தைகளாக மாற்றி விட வேண்டும் என்பதுதான் என் ஆசை. 

நன்றிகள்:
இந்த இரண்டு நிகழ்ச்சியும் அனைவரின் ஒத்துழைப்போடும் மிக சிறப்பாக முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்காக எனக்கு உதவ என் நண்பன் மாரி முத்துவும் வந்தது மகிழ்ச்சியை தந்தது. இரண்டு நிகழ்சிகளும் சிறப்பாக நடக்கவும் எல்லா வித உதவிகளையும் அமர் சேவா சங்கமும், உயர் திரு. ராமகிருஷ்ணன் அய்யாவும் (சிவ சரஸ்வதி வித்யாலயா) செய்திருந்தார்கள். நன்றிகள். வௌவால் புகைப்படங்களை நமக்காக இலவசமாக, அச்சு செய்து வழங்கிய என் நண்பன் உயர் திரு. ஹரி பிரதான் அவர்களுக்கும் என் நன்றிகள்.
நமது சிறிய முயற்சியும் நிச்சயம் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரலாம் ! 

பிரவின் குமார் 
கோயம்புத்தூர்
Save nature otherwise no future

Monday 3 March 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள்: 14
விந்தை உலகம்: 
காட்டு எலிகளும் (Wild rodents)  முள்ளெலிகளும் (Hedgehogs) 

கடந்த 9/2/2014 அன்று மாலை, ஒலிப்பதிவிற்க்காக நான் திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலையத்திற்கு சென்றிருந்தேன். வார வாரம் புதன் கிழமைகளில் காலையில் ஒலிபரப்பாகும் விந்தை உலகம் நிகழ்ச்சியில் எனது கருத்துகளை சொல்வதற்காக சென்றிருந்தேன். காட்டு எலிகளை பற்றியும், முள்ளெலிகளை பற்றியும் தான். இந்த நிகழ்ச்சியில் அழிவில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் பல சிறிய பாலுட்டிகளில் ஒன்றான காட்டு எலிகளை பற்றியும், இந்த காட்டு எலிகளின் முக்கியதுவத்தை பற்றியும், நமது நாட்டில் உள்ள மூன்று வகையான முள்ளெலிகளை பற்றியும் மிகக்குறிப்பாக நமது பகுதியில் மட்டுமே காணக்கூடிய தென் இந்திய முள்ளெலிகள் பற்றியும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டேன். இதில் பல தகவல்கள் மிகவும் அரியது மற்றும் கேட்கும் வாசகர்களுக்கு புதிது. இந்த நிகழ்ச்சிக்காக என்னை அழைத்த உயர்திரு. திருமலை நம்பி அவர்களுக்கு என் நன்றிகள். மிக விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என நினைக்கிறன்.  




ஏன் எலிகளை பற்றி


2011 முதல் 2020 வரை இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவில் பலவகையான தாவர விலங்குகள் மிக விரைவில் பூண்டோடு அற்று போகலாம் (Extinction) என பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்திருகின்றது. அதனால், மிக வேகமாக அழிவை நோக்கி உள்ள அதிகம் ஆராய்ச்சி செய்யபடாத மிக சிறிய  இந்தியப் பாலுட்டிகளை பற்றி பாமர மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக இந்த நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தேன்.



நன்றிகளுடன் 
பிரவின் குமார் 

ANIMAL WELFARE FORTNIGHT PROGRAM 2014.

தொடரும் நம் சூழல் பயணங்கள்: 13
ANIMAL WELFARE FORTNIGHT PROGRAM 2014.

கடந்த 31/1/2014 அன்று வெள்ளிக்கிழமை animal welfare fortnight 2014 நிகழ்சிக்காக GRG polytechnique கல்லூரிக்கு சென்றிருந்தேன். இந்த நிகழ்ச்சி இரண்டு நிகழ்வாக நடந்தது.  1. animal welfare fortnight பேச்சு 2. வினாடி வினா போட்டி. 

1. கல்லூரி முதல்வரை சந்தித்துவிட்டு நான் செமினார் ஹாலுக்கு சென்றேன். முதலில் என் அலுவலகத்தை பற்றி சொல்லிவிட்டு, ஏன் சனவரி 14 - 31 வரை animal welfare fortnight கொண்டாட வேண்டும் என சொல்லிவிட்டு வியத்தகு காட்டு விலங்குகள், அதிசய வீட்டு விலங்குகள் என பல தகவல்களை சொன்னேன். 

பின்பு மேன்மை மிகு மேற்குத் தொடர்ச்சிமலை பற்றியும் அங்குள்ள பல்லுயிர் சூழல் பற்றியும் சொன்னேன். பின்பு இந்தியாவில் இருந்து அழிந்துபோன (பூண்டோடு அற்று போன) சில விலங்குகளை பற்றியும் கூறினேன். நாகரீக மாற்றம் மற்றும் பேராசை எவ்வாறு நம் சூழலைக் கெடுக்கிறது, நம் பலவகைப்பட்ட விலங்குகளை அச்சுறுத்துகிறது எனவும் விளக்கினேன். பின்பு ஒரு சிறிய வீடியோவை காட்டிவிட்டு, save nature otherwise no future என்ற எழுச்சிமிகு வார்த்தைகளுடன் முடித்துக்கொண்டேன்.    

2. ஏற்கனவே பிரிக்கப்பட்ட 4 பேர் கொண்ட 8 குழுக்களின் மத்தியில் 'தாவர-விலங்கு பற்றிய வினாடி வினா' நிகழ்ச்சியை நடத்தினேன். இந்த போட்டி நான்கு சுற்றுக்களாக நடந்தது. இதில் எல்லா குழுக்களும் மிக உற்சாகமாக கலந்துகொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அட்டகாசமாக பதிலளித்தனர்.  






இதில் 55 பாயிண்ட்களுடன் giraffe குழு முதலிடம் பெற்றது. முதல் இரண்டு இடங்களை பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கியது கல்லூரி நிர்வாகம். அனைத்து வகுப்பாசிரியர்களும் மாணவர்களை உற்சாகப்படுத்தினார்கள். 




இந்த வகுப்பு, அவர்களுக்கு விலங்குகளை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்கும் என நம்புகிறேன்.  
அனைவர்க்கும் நன்றிகளை சொல்லிவிட்டு திரும்பி வந்தேன்.

என்றும் 
பிரவின்