ஓவ்வொரு வருடமும் சூன் 5 "உலக சுற்றுச் சூழல் தினமாக" கொண்டாடப் படுகிறது. கடந்த சூன் 5 ம் தேதி, மும்பையின் இரண்டு இடங்களில் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினேன். முதல் நிகழ்ச்சி கல்லூரி மாணவர்களுக்காகவும், இரண்டாவது நிகழ்ச்சி பள்ளி குழந்தைகளுக்காகவும் என ஏற்பாடு செய்திருந்தேன்.
முதலாம் நிகழ்வில் நன்னீர் உயிரினங்கள், அழிவில் உள்ள சில மேற்கு தொடர்ச்சி மழையின் தாவர, விலங்கு குழுக்களை பற்றி கலந்துரையாடினேன்.
ஆராய்ச்சிக்கான உக்திகள், வன விலங்கு ஆராய்ச்சி நிதி திரட்டும் வழி முறைகள் என பலவகைபட்ட விசயங்களை பகிர்ந்து கொண்டேன்.
அனைவரின் ஒத்துழைப்போடு இந்த நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது.
அன்புடன்
பிரவின் குமார்
கன்னியாகுமரி
0 comments:
Post a Comment