About

Tuesday 28 April 2015

தொடரும் நம் சூழல் பயணங்கள்: 41


வெளவால்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி் - சிவகாசி


கடந்த பிப்ரவரி  9 அன்று வௌவால்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிவகாசியிலுள்ள ‘சுருதி வித்யோதயா’ பள்ளியில் நடத்தினேன்.  இந்த நிகழ்ச்சி வெளவால்களை அறிந்து கொள்வதும், பாதுகாப்பதற்குமானது.  நிகழ்வை பள்ளி முதல்வர் துவக்கி வைத்தார்கள்.  முதலில் என்னைப் பற்றி சொல்லிவிட்டு ஒரு சில மாணவ-மாணவிகளை அறிமுகம் செய்து கொள்ளச் செய்தேன்.  தங்கள் பெயர், வகுப்பு, கடைசியாக தாங்கள் வெளவால்களைப் பார்த்த இடம் போன்றவற்றைச் சொன்னார்கள்.  பின்பு அழிவில் காடுகள் வீடியோவைக் காட்டி விட்டு 5 வகை உயிர்க் குழுக்கள் பற்றியும், உணவுச் சங்கிலி பற்றியும் சொன்னேன்.  பின்பு மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம், அங்குள்ள பல அரிய விலங்குகள் பற்றியும் சொன்னேன்.  பின்பு நம் காடுகளிலிருந்து அழிந்து போன சிவிங்கிப் புலி பற்றி சொன்னேன்.  




பின்பு 6 குழுக்களுக்கிடையில் ஒரு குழு விளையாடச் செய்தேன். அப்புறம், பாலூட்டிகள் என்றால் என்ன? வரையறை, இந்திய பாலூட்டிகள், சாதாரணமாக பார்க்கக் கூடியவை, அரிதாய் காண்பவை என எடுத்துச் சொன்னேன்.  பின்பு மீண்டும் 6 குழுக்களைப் பிரித்து தலைவரை தேர்ந்தெடுத்தேன். நான் ஒவ்வொரு குழுவிற்கும், வெளவால் தகவல் பெட்டகத்தை வழங்கினேன்.  




பின்பு வெளவால் பற்றி பல தகவல்களை வரிசையாக விளக்கினேன்.  படங்கள், அட்டைகள், மற்றும் உதாரணங்களுடன் நான் விளக்கினேன். பின்பு 10 நிமிட நேரம் கொடுத்தேன்.  குழுத் தலைவர்களும் ஒருவர், ஒருவராக 3-5 நிமிடம் வரை வெளவால்கள் பற்றியும், பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் சொல்லி கைத்தட்டல்களுடன் சென்றனர்.




வெளவால் பாதுகாப்பு தொடர்பாக நாங்கள் ஒரு உறுதி மொழி எடுத்தோம். பின்பு 3 படங்களுடன் வகுப்பு நிறைவடைந்தது. மாணவர்களின் ஈடுபாடும் ஆர்வமும் சிறப்பாக இருந்தது.  நிகழ்ச்சியை முடித்துவிட்டு நான் சிவகாசி எக்ஸனேரா. லதா அபிரூபன் அவர்களைச் சந்தித்துவிட்டு சிவகாசியிலிருந்து பேருந்தில் புறப்பட்டேன். அனைவரின் ஒத்துழைப்போடு இந்த நிகழ்ச்சி இங்கு சிறப்பாக நடந்து முடிந்தது.





அன்புடன்
ஆர். பிரவின் குமார்.
கன்னியாகுமரி.


0 comments:

Post a Comment