About

Tuesday, 13 August 2013

தொடரும் நம் சூழல் பயணங்கள் III




தொடரும் நம் சூழல் பயங்கள் III

கடந்த ஞாயிறு (ஆகஸ்ட் 11) நானும் என் தோழியும் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள பில்லூர் என்ற மலை கிராமத்திற்கு, குழந்தைகளுகான சுற்றுச்சூழல் நிகழ்ச்சிகளுக்காக சென்றிருந்தோம். பில்லுரில்  உள்ள கி ஸ்டோன்- அலுவலகத்தில் நிகழ்ச்சி நடந்தது. மேட்டுப்பாளையத்திலேருந்து நாங்கள் கி-ஸ்டோன் வாகனத்தில், காட்டின் வழியே, கரடு முரடான பாதை வழியாக பில்லூர் போய் சேர்ந்தோம். இந்த சாலையில் போகும் போது "எப்படித்தான் இந்த பகுதி மக்கள் இந்த ரோட்டில் போகிறார்கள்" என்ற உணர்வு வந்தது.  

                      


இந்த ஊர் மிக அழகாகவும், அதிகம் ஆள் நடமாட்டமில்லாததாக இருந்தது. "வன விலங்குகளும் காடுகளும்" என்ற பொதுவான தலைப்பில் நிகழ்ச்சியை வடிவமைத்திருதோம். நாங்கள் வனவிலங்குகளின் அட்டைகளை சுவற்றில் ஒட்டி கொண்டிருந்தோம். குழந்தைகள் ஒருவர் ஒருவராக வந்துகொண்டு இருந்தனர். மிக எளிமையான சுற்றுச்சூழல் அறிமுகத்துடன் குழந்தைகளுடன் கலந்துரையாடினோம். 

                      


எப்போதும் நாம் குழந்தைகளை அறிமுகபடுத்தும் அதே Know each other விளையாட்டு மூலமாக அவர்களை பற்றி தெரிந்து கொண்டோம். பின்னர் "வன விலங்குகள்" என்ற தமிழ் வீடியோ காண்பித்துவிட்டு, அவர்களை சுற்றி உள்ள விலங்குகளை பற்றி சில செய்திகள் சொன்னோம்.  

பின்னர் ஐந்து வகை உயிர் குழுக்களை பற்றி அட்டை மூலமாக விளக்கினோம். பின்னேர் அவர்களையும் திரும்ப சொல்ல சொன்னோம். அப்புறமாக "ஐலசா" என்று முடியும் ஒரு நாட்டுப்புற குழு பாடலைப் பாடிவிட்டு  அதன் கருத்துகளை கூறினேன்.  பறப்பன, ஊர்வன, இருவாழ்விகள், மீன்கள், பாலுட்டிகள் பற்றி உதாரணங்களை சொல்லிவிட்டு, தவளையின் வாழ்க்கை சுழற்சியை படம் மூலமாக விளக்கிச் சொன்னேன். 


பின்னர் energizer என்ற ஒரு சிறிய விளையாட்டை முடித்துவிட்டு, அடுத்த அடுத்த நிகழ்வான "குழு வரைபடம்" பகுதிக்கு சென்றோம். 

                       

மதிய உணவுக்கு பின்னர் பங்கேற்பாளர்கள் அனைவரும் ஐந்து குழுவாக பிரிந்து "சூழல் மாசுபாட்டில் நம் விலங்குகள்" என்ற தலைப்பிற்கு ஏற்றவாறு படம் வரைந்து, அதன் விளக்கங்களை அனைவருக்கும் புரியும் வண்ணம் சொன்னார்கள்.








அப்புறமாக வௌவால், தவளை, பூச்சி மற்றும் தேனீ, பொம்மைகள் கொண்டு அவற்றின் சூழல் முக்கியத்துவம் பற்றி சொன்னோம். 

முக்கியமாக வௌவால் குறித்த தகவல்களை குழந்தைகள் மிக சுலபமாக புரிந்து கொண்டு, கேள்விகளையும் கேட்டார்கள். எளிமையாக புரியும் வண்ணம் குழந்தைகளுக்கு சொல்லிவிட்டு, சூழலை காப்பதில் நம் பங்கு என்ன என்பதை கூறிவிட்டு "காடு அழிவு" பற்றி வீடியோ காண்பித்தேன்.

பின்னர் அனைவரும் எழுந்து நின்று, நம் காடுகளையும், நம் விலங்குகளையும் பாதுகாக்க உறுதிமொழி எடுத்து கொண்டோம். அனைவர்க்கும் விலங்கு அட்டைகளும், பென்சில்களும் வழங்கிவிட்டு, நன்றியுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தோம்.

  

இந்த நிகழ்ச்சிக்காக எனக்கு உதவிய கி- ஸ்டோன் நண்பர்களுக்கும், Zoo Outreach ல் உள்ள உயர்திரு. டேனியல் மற்றும் உயர்திரு.மாரிமுத்து ஆகியவர்களுக்கும் என் நன்றிகள். 


இந்த நிகழ்ச்சிக்காக பிரத்யோகமாக, இனிப்புகளை வழங்கிய 

என் நண்பன் 

நவீன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

மிக சிறப்பான மனிதர்களால் மிக சிறப்பான, சிறந்த செயல்களை 

செய்யமுடியும். நாம் 

அனைவரும் மிக சிறப்பானவர்களாக மாற என் வாழ்த்துக்கள். 

*****************



Related Posts:

  • தொடரும் நம் சூழல் சந்திப்புகள் II தொடரும் நம் சூழல் சந்திப்புகள் II  கடந்த ஞாயிறு (28 ஜூலை) அன்று திருநெல்வேலியில் உள்ள The Florence Swainson Higher Secondary School for the deaf க்கு ஒரு சுற்றுச்சூழல் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன்.  … Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் III தொடரும் நம் சூழல் பயணங்கள் III கடந்த ஞாயிறு (ஆகஸ்ட் 11) நானும் என் தோழியும் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள பில்லூர் என்ற மலை கிராமத்திற்கு, குழந்தைகளுகான சுற்றுச்சூழல் நிகழ்ச்சிகளுக்காக சென்றிருந்தோம். பில்லு… Read More
  • My environmental conservation activities in past years to up to date.... Normal.dotm 0 0 1 1577 8991 ZOO 74 17 11041 12.256 0 false 18 pt 18 pt 0 0 false false false /* Style Definitions */ table.Mso… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள்: I தொடரும் நம் சூழல் பயணங்கள்: I கடந்த சில வாரங்களாக பல்வேறு அலுவலக பணிகளுகிடயிலும் எதோ ஒரு மிக பெரிய சந்தோசம் என்னை தொற்றி கொண்டது. என்ன என்று யோசிக்கும் போதுதான் ஓ! குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் வகுப்பு எடுக… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் IV தொடரும் நம் சூழல் பயணங்கள் IV கடந்த ஞாயிறு (ஆகஸ்ட் 18) நான் கொடைக்கானல் அருகிலுள்ள "பண்ணைக்காடு" என்ற கிராமத்திலுள்ள பழங்குடி குழந்தைகள் காப்பகத்திற்கு "வௌவால்களும் அவற்றின் அவசியமும்" என்ற ஒரு நாள் நிகழ்ச்சிக்காக செ… Read More

0 comments:

Post a Comment