About

Monday, 5 August 2013

தொடரும் நம் சூழல் சந்திப்புகள் II



தொடரும் நம் சூழல் சந்திப்புகள் II 


கடந்த ஞாயிறு (28 ஜூலை) அன்று திருநெல்வேலியில் உள்ள The Florence Swainson Higher Secondary School for the deaf க்கு ஒரு சுற்றுச்சூழல் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன்

எப்போதும் போல அதே சந்தோசத்துடன், நானும் என் தோழர் வெங்கடேஷ் பாபுவும் வகுப்பறையை, தலைப்பிற்கு ஏற்றவாறு தயார் செய்தோம். கொண்டு வந்திருந்த அட்டைகளை ஒட்டிவிட்டு தலைமை ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தோம். இந்த பள்ளிதான் 2004 வருடத்திற்கான மாநில சூழல் விருதை பெற்ற பள்ளி, சூழல் அக்கறை பற்றி கவனத்துடன் செயல்படும் பள்ளி எனவும் தெரியவந்தது. இந்த அறை "சுற்றுச்சூழல் பரப்பு மையம்" என்ற பெயரை தாங்கி நிற்க்கிறது. இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உதவியுடன் சூழல் குறித்த எண்ணற்ற பதாகைகள் இருந்தன. மேலும் தமிழ்நாட்டின் தேசிய விலங்கு, பூ, மரம், பறவை படங்கள் பளிச்சென தெரிந்தது.   

"உங்களை சுற்றி விலங்குகள்" என்ற தலைப்பில் நான் பேசுவதற்காக தயாரானேன்

சுமார் அறுபது மாணவ மாணவியர்கள் அறையில் இருக்க, தலைமை ஆசிரியரின் சுற்றுச்சூழல் அறிமுகத்தோடு நிகழ்ச்சி ஆரம்பமானது



தோழர் வெங்கடேஷ் பாபுவிற்கு ஐந்தாவது நிகழ்ச்சி (இதே பள்ளியில்) எனவே அவர் குழந்தைகள் அனைவரையும் மிக சுலபமாக புரிந்துவைத்திருந்தார்.மேலும் மிக எளிமையாக- தன்னம்பிக்கை, கற்பனைசக்தி, வெற்றி போன்ற தலைப்புகளின் அவருக்கே உரிய மாறுபட்டு சிந்திக்கும் திறனுடன் குழந்தைகளுடன் பேசினார். மாணவர்களும் மிக எளிமையாகவும், சகஜமாகவும் வகுப்பில் இருந்தனர். அவருடைய ஒவ்வொரு கருத்துகளையும் மொழிபெயர்ப்பாளர் அக்கா விரைவாக குழந்தைகளுக்கு சொன்னார்பின்னர் நான் நம்மை சுற்றி இருக்கும் விலங்குகள் பற்றி அவர்களிடம் கேட்டுவிட்டு, ஒரு சிறிய சூழல் விளையாட்டு நடத்திவிட்டு "தேன்சிட்டுவின் கதை" காணொளியை காண்பித்தேன்
அனைவரும் ஆர்வத்துடன் பார்த்து குதூகலித்தனர்

பின்பு, மரங்களின் பயன்பாடு மற்றும் மருத்துவகுணமுள்ள தாவரங்கள் பற்றியும் அவர்கள் நிறைய தகவல்களை சொன்னார்கள் . நானும் அதை தொடர்புடைய தகவல்களை சொன்னேன்


பின்னர், குழந்தைகளுக்காக நான் கொண்டுசென்றிருந்த பூச்சி, தவளை, வௌவால், தேனீச்சீ பொம்மைகளை (Finger Puppets) காட்டி அவற்றின் முக்கியத்துவம், சூழல் சமநிலையில் அவைகளின் பங்கு குறித்து சில தகவல்களை சொன்னேன்

நாளை புலி நாள் (Tiger Day) என்பதால் கொஞ்சம் புலிகள் பற்றி சொல்லிவிட்டு, சேகர் தத்தாத்ரியின் 'புலிகள் பற்றிய உண்மை' என்ற ஆவணப்படம் போட்டு காண்பித்தேன்



கடைசியாக Zoo Outreach, விலங்கு வாழ்த்து அட்டைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தோழர் வெங்கடேஷ் பாபுவின் (Eventura) மூலமாக மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தலைமை ஆசிரியரின் நன்றிகளுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்ததுஇந்த குழந்தைகளுடைய சிறப்பான செயல் செய்யும் திறன், கற்பனை சக்தி, மன திடம், அனைவரையும் அரவணைக்கும் பண்புகளை கண்டு சந்தோஷப்பட்டோம். இனி வரும் காலங்களில் இவர்கள் நிச்சயம் ஒரு சூழல் மேல் அக்கறை உள்ளவர்களாக வருவார்கள்.



இந்த நிகழ்ச்சிக்காக அனைத்துவித கருத்துகளையும் வழங்கிய மதிப்பிற்குரிய என் ஆசிரியர்கள் டேனியல் மற்றும் மாரிமுத்து அவர்களுக்கு என் நன்றிகள்தோழர் வெங்கடேஷ் பாபு, மற்றும் தலைமை ஆசிரியர்  அவர்களுக்கும் என் நன்றிகள். 

வாழ்த்துகளுடன், 
பிரவீன் 

Related Posts:

  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 15 & 16 கடந்த 23.2.2014 அன்று நிகழ்ந்த இரண்டு நிகழ்ச்சிகளும் சிறப்பாக இருந்தது. முதல் நிகழ்ச்சி ஆய்குடி சிவ சரஸ்வதி வித்யாலாவிலும், இரண்டவது நிகழ்ச்சி  ஆய்குடி அமர் சேவா சங்கத்திலும் ந… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் XII : சிறு பாலுட்டிகள் - விழிப்புணர்வு நிகழ்ச்சி - ஆழ்வார்க்குறிச்சி தொடரும் நம் சூழல் பயணங்கள் XII சிறு பாலுட்டிகள் - விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 13/1/2014 அன்று, மூன்று மணிநேர சிறிய பாலுட்டிகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்க்குறிச்சி - சிவசை… Read More
  • ANIMAL WELFARE FORTNIGHT PROGRAM 2014. தொடரும் நம் சூழல் பயணங்கள்: 13 ANIMAL WELFARE FORTNIGHT PROGRAM 2014. கடந்த 31/1/2014 அன்று வெள்ளிக்கிழமை animal welfare fortnight 2014 நிகழ்சிக்காக GRG polytechnique கல்லூரிக்கு சென்றிருந்தேன். இந்த நிகழ்ச்சி இரண்டு நி… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள்: 14 விந்தை உலகம்:  காட்டு எலிகளும் (Wild rodents)  முள்ளெலிகளும் (Hedgehogs)  கடந்த 9/2/2014 அன்று மாலை, ஒலிப்பதிவிற்க்காக நான் திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலையத்திற்கு செ… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 17 காகித பாதுகாப்பும் - தனி மனித சூழல் கரிசனமும் கடந்த பிப்ரவரி 26 அன்று ஒரு நாள் கருத்தரங்கம் Government College of Technology, கோவையில் நடந்தது. தலைப்பு: "பசுமை தொழில்நுட்பமும், நிலைத்த நீடித்த வாழ்வும்".  இந்த நிகழ்… Read More

0 comments:

Post a Comment