தொடரும் நம் சூழல் பயணங்கள் XII
சிறு பாலுட்டிகள் - விழிப்புணர்வு நிகழ்ச்சி
கடந்த 13/1/2014 அன்று, மூன்று மணிநேர சிறிய பாலுட்டிகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்க்குறிச்சி - சிவசைலத்தில் உள்ள "ஔவை ஆசிரமத்திற்க்கு" சென்றிருந்தேன். நான் படித்தது ஆழ்வார்க்குறிச்சியில் உள்ள ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரியில் தான். வெகு நாட்களுக்கு பிறகு அந்த கல்லூரி சாலையும், அங்குள்ள சாலை ஓர மரங்களும் என் கல்லூரி ஆசிரியர்களையும்,...