About

Monday, 26 May 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 22


கல்லூரி மாணவர்களிடம் ஒரு கலந்துரையாடல் - ஆழ்வார்க்குறிச்சி

திருநெல்வேலி, நாணல்குளம் வௌவால் விழிப்புணர்வு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மதிய வேளையில் ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரிக்கு வந்தேன். கல்லூரி முதல்வர் முனைவர். ரஞ்சித் சிங் அவர்களை சந்தித்து விட்டு இளங்கலை உயிர் தொழில் நுட்பவியல் துறைக்கு சென்றேன். செல்லும் வழியில் நுண்ணுயிரியல் துறையில் என் ஆசிரியர் முனைவர். விஸ்வநாதன் அவர்களையும், விலங்கியல் துறையில் முனைவர்.சுதாகர் அவர்களையும் சந்தித்தேன். முனைவர்.சுதாகர் அவர்கள் கடந்த பல வருடமாக வௌவால்கள் பற்றிய ஆராய்ச்சிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   

அப்படியே நான் பயின்ற உயிர் தொழில் நுட்பவியல் துறைக்கு வந்தேன். என் நண்பன் பாலாவை சந்தித்து விட்டு, துறைத்தலைவர் முனைவர். இராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்து விட்டு, ஏற்கனவே திட்டமிட்டபடி மூன்று ஆண்டு மாணவர்களுக்கும் உயிரி தொழில் நுட்பவியல் பற்றியும், வேலைவாய்ப்புகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்தும் சில தகவல்களை வழங்குவதற்காக சென்றேன். மிக முக்கியமாக எப்படி ஆராய்ச்சிகள் நமது பகுதியில் உள்ள சமுகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என்று சில உதாரணங்களுடன் சொன்னேன். 

பின்பு அவர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தி அறிவியலை எளிமையாக, ஆர்வமாக கற்க வேண்டும் என சொன்னேன். இந்த கலந்துரையாடலில் எனக்கு தெரிந்த சில தகவல் மூட்டைகளை அவர்களிடத்தில் சொல்ல செல்லவில்லை. அவர்களிடத்திலே புதைந்து உள்ள கேள்வி கேட்கும் திறனையும், அடிப்படை அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக இந்த கலந்துரையாடல் இருந்தது.   

மிக முக்கியமாக சென்னை ஐ.ஐ.டி, சென்னை பல்கலைக்கழகம். பெங்களுரு NCBS, பயோக்கான் போன்ற பெரிய கல்வி மற்றும் ஆய்வு நிலையங்களில் உள்ள பல மாணவர்கள் இந்த கிராமப் பகுதியை சார்ந்தவர்கள். பலரும் அடிப்படை கல்வியை இங்கு படித்தவர்கள் ஆவர்.                     

அறிவியல் ஆர்வம், ஆங்கில சரளம் இரண்டும் மிக அவசியம் எனவும் சொன்னேன். ஆராய்ச்சிப் படிப்புகள் (உணவு, தோல், மருத்துவத்துறை, நுண்ணுயிரி, மரபு பொருளியல் மற்றும் பல) பற்றியும் சில செய்திகளை சொன்னேன். 



இந்த சிறிய கலந்துரையாடலுக்காக என்னை அழைத்த முனைவர். இராம கிருஷ்ணன் அவர்களுக்கும், என் நண்பன் பாலாவிற்கும் என் நன்றிகள். நான் இந்த கல்லூரியின், இந்த துறையின் பழைய மாணவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். 

படிப்போம் இன்னும் ஆர்வமாக …

பிரவின் குமார்   
கோயம்புத்தூர் 
             

Related Posts:

  • தொடரும் நம் சூழல் பயணங்கள்: IX சிறிய பாலுட்டிகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி  கடந்த மாதம் 4ம் தேதி அன்று சிறிய பாலுட்டிகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் உள்ள காண… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 25 காடுகளும் விலங்குகளும் குறித்த  விழிப்புணர்வு நிகழ்ச்சி  பேரிஜம் ஏரி - கொடைக்கானல்  திருச்சி "பயிர்" பள்ளி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கொடைக்கானல் நிகழ்ச்சிக்கு கிளம்பினோம். நிகழ்ச்சிக்கு ம… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 24 உயிரினங்கள் குறித்த இரண்டு நாள் கலந்துரையாடல் - திருச்சி  கடந்த மே மாதம் 15 ம் தேதி அன்று திருச்சி பயிர் பள்ளியில் (www.payir.org) இரண்டு நாள் "உயிரினங்கள்" குறித்த பயிலரங்கை நடத்துவதற்காக கோவை அருளகம் திரு.பார… Read More
  • My environmental conservation activities in past years to up to date.... Normal.dotm 0 0 1 1577 8991 ZOO 74 17 11041 12.256 0 false 18 pt 18 pt 0 0 false false false /* Style Definitions */ table.Mso… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 26 நீயா நானா ? சூடான விவாதம்  கடந்த ஜூன் 1ம் தேதி நான் விஜய் தொலைக்காட்சி "நீயா நானாவில்" கலந்து கொள்ள சென்னை சென்றிருந்தேன். இந்த நிகழ்ச்சியில் விவாதம் பிராணிகளை வளர்க்கும், வன விலங்கு ஆராய்ச்சி செய்யும் தரப்பிற்கும்… Read More

0 comments:

Post a Comment