About

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, 10 June 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 24


உயிரினங்கள் குறித்த இரண்டு நாள் கலந்துரையாடல் - திருச்சி 


கடந்த மே மாதம் 15 ம் தேதி அன்று திருச்சி பயிர் பள்ளியில் (www.payir.org) இரண்டு நாள் "உயிரினங்கள்" குறித்த பயிலரங்கை நடத்துவதற்காக கோவை அருளகம் திரு.பாரதிதாசன் அவர்களுடன் சென்றிருந்தேன். நிகழ்ச்சிக்கு தேவையானவற்றை தயார் செய்து கொண்டு இருவரும் அதிகாலையில் திருச்சியை அடைந்தோம். திருச்சியிலிருந்து தேனூருக்கு முதல் பேருந்தில் ஏறி தேனூர் சென்றடைந்தோம். இறங்கியவுடன் சாலையின் இரு புறமும் உள்ள பெரிய மரங்களை கண்டேன். அவற்றை தொட்டு பார்த்து பரவசமாகினேன்..மெதுவாக நடக்க ஆரம்பிதோம். ஒரு நிமிட நடைக்கு அப்புறம் தேனூர் பள்ளியை அடைந்தோம். ஒடுகளால் வேயப்பட்ட அந்த பள்ளியும், மருத்துவமனையும் பல மக்களின் தேவையை தினமும் பூர்த்தி செய்து கொண்டிருப்பதாக திரு.பாரதிதாசன் அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அதிகமான மரங்களும், அமைதியான காற்றும் ரம்மியமாக இருந்தது..என்னை மிகவும் கவர்ந்தது

இந்த இடத்தில் நமது குழந்தைகளுக்கு வனம் மற்றும் காடுகள் குறித்து பட்டறையை நடத்தப்  போகிறேன் என்று நினைக்கும்போதே என்னக்குள் சந்தோசம் பீறிட்டு பொங்கியது

ஒரு சிறிய ஓய்வுக்கு பிறகு எழுந்தேன்வெளியில் பல குழந்தைகள் மகிழ்ச்சியாக ஊஞ்சல் விளையாடிக் கொண்டிருந்தனர்….நானும் சிறிது நேரம் ஊஞ்சலில் விளையாடிவிட்டு வந்தேன்இன்றைய வகுப்பிற்கு தேவையானவற்றை தயார் செய்து கொண்டு வகுப்பிற்குள் சென்றேன்வனம் மற்றும் காடுகள் குறித்த தகவல்கள் அடங்கிய காகிதங்களை ஓட்டினேன்திரு.பாரதிதாசன் அவர்கள் நிகழ்ச்சியை சிறிய அறிமுகத்துடன் தொடங்கி வைத்தார்கள்இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளகள் அனைவரும் கிராமப் புற பள்ளிக் குழந்தைகள் ஆகும்அவர்களிடம் இன்றும்நாளையும் நாம் என்ன என்ன கற்றுக்கொள்ளப் போகிறோம் அதை எப்படி கற்றுகொள்ளப் போகிறோம் எனச் சொன்னேன்அனைவரின் பெயர்வகுப்பு மற்றும் ஊர் போன்றவற்றை கேட்டுத் தெரிந்து கொண்டேன்வனவிலங்குகளைப் பற்றி ஒரு சிறிய அறிமுகத்தை சொல்லிவிட்டு வகுப்பிற்கு வெளியில் “attitude assessment” என்ற ஒரு நிகழ்வை நடத்தி மாணவர்களின் வனவிலங்கு பற்றிய அடிப்படைப் புரிதலை தெரிந்து கொண்டேன்







பின்பு இயற்கை அன்னை குறித்த ஒரு வீடியோவைக் காட்டிவிட்டு    மரபு சாரா எரிசக்தி பற்றிய ஒரு சிறிய, சிந்திக்க வைக்கும், வீடியோவை காட்டினேன்



பின்பு அனைவரையும் ஐந்து குழுக்களாகப் பிரித்து  குழுவிற்கு ஒரு அட்டையை கொடுத்தேன். பத்து நிமிடம் நேரம் கொடுத்து தலைப்பிற்கு பொருத்தமான தங்களுக்கு தெரிந்த செய்திகளை தயார் செய்ய சொன்னேன். பத்து நிமிடத்திற்க்கு அப்புறம் குழுத் தலைவர் தகவல்களை அனைவரின் முன்பும் சொல்லி கை தட்டல்களை பெற்றார். பின்பு சோலைக் காடுகளை காப்போம் என்ற வீடியோ வை காட்டினேன். அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் பார்த்து ரசித்தனர்.     




அனைவரையும் மரத்தடியில் அமர்த்தி குழுக்களாகப் பிரித்து கதைகளைக் கேட்டோம். அவர்கள் விலங்குகள் பற்றி பல கதைகளை சொன்னார்கள். நானும் தேன் சிட்டு பற்றிய ஒரு கதையை சொல்லி விட்டு மதிய உணவு இடைவெளிக்கு சென்றோம். உணவுவிற்கு பிறகு ஆசிரியர். பாலா பாட்டு சொல்லிகொடுத்தார். குப்பை என்ற ஒரு வீடியோவைக் காட்டினேன். பின்பு அனைவரையும் நான்கு குழுக்களாகப் பிரித்து puzzle விளையாட்டை விளையாடினேன். பின்பு ஒவ்வொரு குழுவிற்கும் விலங்குகளின் வகைகளையும், முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொன்னேன்







பின்பு ஒரு குடம் தண்ணி ஊத்தி என்ற வீடியோ வை காட்டி விட்டு வௌவால் பற்றிய வகுப்பை துவக்கினேன். வௌவால் இனங்கள் பற்றிய பலவித சுவாரசிய தகவல்களை சொன்னேன். பல மாணவர்கள் நான் சொன்னவற்றை மீண்டும் அனைவர் முன்னும் சொல்லி கைதட்டல்களைப் பெற்றனர். வௌவால் பற்றியவண்ணம் செய்யும் செயல்பாட்டைஅடுத்து பிணம்தின்னி கழுகுகள் பற்றி திரு.பாரதிதாசன் அவர்கள்  சொன்னார்கள். ஒரு குழுப் புகைப்படத்துடன் இந்த மாலையில் முதல் நாள் வகுப்பை முடித்துக் கொண்டோம்





இரண்டாவது நாள் காலையில் சீக்கிரமாகவே மாணவர்கள் வரத் தொடங்கினர். இன்றைய நாள் வகுப்பு மைதானத்தில் விளையாட்டுடன் தொடங்கினேன். முதலில் pass the stick விளையாட்டும், பின்பு கர்சீப் எடுத்தல் விளையாட்டையும் சொல்லிக் கொடுத்து விட்டு, இரண்டு முறை விளையாடி முடித்துவிட்டு வகுப்பிற்குள் அழைத்து சென்றேன். 







அனைவரையும் மூன்று குழுக்களாக பிரித்து காட்டின் வகைகளை சொல்லிவிட்டு “puzzle” விளையாட்டுடன்  காட்டில் உள்ள பறவை மற்றும் விலங்குகள் பற்றி சொன்னேன்.  





பின்பு அனைவரையும் நான்கு குழுக்களாகப் பிரித்து, ஓவ்வொரு குழுவிற்கும் வனவிலங்குகள் உள்ள ஒரு பெரிய அட்டையை கொடுத்தேன். அனைவரும் தங்களுக்கு தெரிந்த, பார்த்த விலங்குகளை பட்டியலிடச் சொன்னேன். அனைத்து குழுக்களும் எழுதி முடித்துவிட்டு எழுதிய பெயர்களை அனவர்க்கும் முன் சொன்னார்கள். நானும், திரு.பாரதிதாசனும் கவனமாக அவர்கள் தவறை சரி செய்தோம்





இந்த விலங்குகளை கண்டறி என்ற நிகழ்விற்கு அப்புறம் தமிழ் வீடியோ ஒன்றை காண்பித்தேன். அது இப்படி ஆரம்பித்தது

நான் பூமி அழுகின்றேன் ..உனக்கு தெரியுதா மனிதா...
நான் நாளும் அழிகின்றேன் ..உனக்கு புரியுதா மனிதா ..
ஆசை மனிதனே சொல் ..ஓசை மனிதனே சொல் .
நான் பிறக்கையிலே நீ இருக்கலியே..
நீ இருக்கையிலே நான் சிறக்கலியே….
ஆசை மனிதனே சொல் ..ஓசை மனிதனே சொல் ……..
………..    ………   
…………   ……….


பின்பு திரு.பாரதிதாசன் அவர்கள் நமது காடுகள் குறித்தும், பாருகள் (கழுகுகள்) குறித்தும் பேசினார்கள். கேள்வி பதில் நிகழ்வாகவும், சிறு கதைகளை கேட்கும் நேரமாகவும், பறவை பார்த்தல் பற்றிய புரிதல்களை விளக்கும் வண்ணமாக பேசினார்கள். ஆர்வமும், ஆர்ப்பரிப்பும் உள்ள குழந்தைகளிடத்தில் வன விலங்கு மற்றும் காடுகள் பாதுகாப்பு குறித்த ஒரு பெரிய, தொடர் உறுதி மொழியுடன் நிகழ்ச்சியை முடிக்கும் தருவாய்க்கு வந்தோம். சுற்றுச் சூழல் துணுக்குகளை சத்தமாக வாசிக்கச் சொன்னேன். பலரும் ஆர்வமாக வந்து வாசித்துவிட்டு சென்றனர்









பயிர் அறக்கட்டளையின் திரு.செந்தில் மற்றும் திருமதி.ப்ரீத்தி அவர்களின் நன்றியுரையுடன் இந்த வகுப்பு முடிந்தது. இரண்டு மாணவர்கள் தங்கள் இரண்டு நாள் அனுபவங்களை சொன்னார்கள்அனைவரையும் பெரிய கைதட்டல் மூலமாக சந்தோசப்படுத்திவிட்டு வனவிலங்கு வாழ்த்து அட்டைகளை வழங்கினேன்





சில பகிர்வுகள்

தவமணி மற்றும் உதய குமார் என்ற இரண்டு தன்னார்வ தொண்டு நண்பர்களும் பகிர்ந்தது

1. வகுப்பு சிறப்பாக இருந்தது 
2. விளையாட்டு மிக சுறுசுறுப்பாக இருந்தது 
3. அனைத்து மாணவர்களும் ஆர்வமாக ஈடுபடும் விதமாக இந்த நிகழ்ச்சி இருந்தது 
4. குழந்தைகளை யோசிக்க வைக்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி இருந்தது 
5. வௌவால் - குழு கலந்துரையாடல் மிகச் சுலபமாக புரிந்து கொண்டனர் 

நன்றிகள்:

என்னை பயிற்சிப் பட்டறையை நடத்த அழைத்த திரு. பாரதிதாசன் (அருளகம்) அவர்களுக்கு நன்றிகள். தேனூர் கிராமத்தை ஒரு முன்னுதாரன கிராமமாக மாற்றி விட்ட திரு.செந்தில் மற்றும் திருமதி.ப்ரீத்தி அவர்களுக்கும் நன்றி. இந்த நிகழ்ச்சியை நடத்த உதவிய என் ஆசிரியர், முனைவர்சஞ்சய் மொலூர், முனைவர்.தானியல் மற்றும் திரு.மாரிமுத்து அவர்களுக்கும் நன்றிகள்.       பயிர் பள்ளியின் ஆசிரியர்கள், தவமணி மற்றும் உதயகுமார் அவர்களுக்கும் என் நன்றிகள். எங்களுக்காக பாரம்பரிய உணவுகளை செய்து வழங்கிய பயிர் கிராம பெண்களுக்கும், பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து குழந்தைகளை அழைத்து வந்த ஆசிரியை அவர்களுக்கும் என் நன்றிகள். நிகழ்ச்சிக்காக வண்ண அட்டைகள், படங்கள், புத்தகங்கள் என அனைத்தையும் வழங்கி உற்சாகப்படுத்திய என் Zoo Outreach அலுவலகத்திற்கும் என் நன்றிகள். இன்னும் புதிதாக பல நிகழ்சிகளை செய்ய இது உத்வேகமாக உள்ளது

இந்த இரண்டு நாட்கள் சென்றதே தெரியவில்லை. விளையாட்டு, காடுகள் & விலங்குகள் பற்றிய வீடியோ, ஓவியம், குழந்தைகளின்  கதைகள், படங்கள் என மகிழ்ச்சியின் துள்ளலில் இருந்த குழந்தைகளுடன் நானும் குழந்தையாகவே மாறிப் போனேன்..

இந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்கு மிகவும் ஈடுபாடாகவும், சற்று புதிதாகவும்,  இயற்கை பற்றி ஒரு புரிதலை ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறேன். பள்ளி ஆசிரியர்களிடம் இந்த மாணவர்களின் சூழல் செயல்பாட்டை அடுத்த ஆறு மாதங்களுக்கு கூர்ந்து கவனிக்குமாறு சொல்லிவிட்டு வந்தேன்.  

ஒரு புதிய ஆரம்பம் ..ஒரு புதிய வெளியை நோக்கி ..
காத்திருப்போம் ..விடியலை எதிர்பார்த்து ….

அன்புடன் 
பிரவின் குமார் 
கோயம்புத்தூர்         



எனது இரண்டு கட்டுரைகள்

சமீபத்தில் வெளியான எனது இரண்டு கட்டுரைகளை இங்கே  காணலாம்.    


1. அழிவின் விளிம்பில் நன்னீர் தாவரங்கள்





2. எதையும் கொறிக்கும் எலிகள் 



இந்த உலகம் நமக்காக மட்டும் படைக்கப்பட்டதல்ல …
அனைத்து உயிர்களுகக்காகவும்தான்..  - தலாய் லாமா. 
                   


Monday, 26 May 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 23



சிறிய பாலுட்டிகள் பாதுகாப்பு
 விழிப்புணர்வு நிகழ்ச்சி: கடையம்

கடந்த ஏப்ரல் 30 அன்று "நான் காணும் சிறிய பாலுட்டிகள்" என்ற ஒரு நிகழ்ச்சியை திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம் வட்டத்தில் உள்ள கட்டேறிப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடத்தினேன். இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் ஆசிரியர்கள், இரண்டு கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். 






நான் பங்கேற்பாளர்களின் அறிமுகத்திற்கு பிறகு அவர்கள் தினமும் பார்க்கும் விலங்குகள் என்ன என்ன என்று கேட்டுவிட்டு, அவர்கள் பார்க்க விரும்பும் விலங்குகள் பற்றியும் கேட்டுவிட்டுஇயற்கை என்ற ஒரு வீடியோவை காண்பித்தேன். பின்பு காட்டு விலங்குகளையும், அவற்றின் நன்மைகளையும் சொன்னேன். பின்பு அனைவருக்கும் மொத்தமாக சேர்த்து 10 சுற்றுச்சூழல் கேள்விகளை கேட்டேன். இந்த கேள்விக்கு பதில் ஆம் என்றால் கைகளை தூக்க வேண்டும், இல்லை என்றால் சும்மா நிற்க வேண்டும் ..பலவித கேள்விகளுக்கும் பலவித பதில்களுடன் இந்த மாணவர்கள் தங்கள் சூழல் அக்கறையை அப்படியே வெளிப்படுத்தினர்




அவர்களை சுற்றி உள்ள காட்டு பகுதியில் உள்ள பலவித முயல்கள், அடிக்கடி பார்க்கும் வௌவால், வயல் பக்கம் திரியும் எலிகள், மரங்களில் சாடும் அணில்கள் பற்றி சுவாரசியமாக கேட்டு தெரிந்து கொண்டேன். 

பின்பு முள் எலிகள் பற்றியும் சொன்னேன். பின்பு பங்கேற்பாளர்கள் அனைவரும் ஏழு குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு சிறிய பாலுட்டிகளின் எண்ணிக்கை, முக்கியத்துவம், படங்கள் மற்றும் சிறப்பியல்புகள் போன்றவற்றை சொன்னேன்




ஒவ்வொரு குழுவில் இருந்தும் ஒரு குழு தலைவர் முன்னால் வந்து அவர்கள் இன்று தெரிந்து கொண்ட தகவல்களை திரும்ப சொல்லி கைதட்டல்களை பெற்றனர். பின்பு சிறிய பாலுட்டிகளை பாதுகாக்கும் விதமாக ஒரு உறுதி மொழியை அனைவரும் சேர்ந்து எடுத்து கொண்டோம். இரண்டு மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை பற்றி தங்கள் கருத்துக்களைச் சொன்னர்கள். பின்பு குழு புகைப்படத்துடன் அவர்கள் இனி செய்ய வேண்டிய செயல்கள் பற்றி சொல்லிவிட்டு வந்தேன்.  






இந்த நிகழ்சிக்காக உதவிய மதிவாணன் ATREE, நண்பர்.வெற்றி மற்றும் பள்ளியில் வகுப்பை நடத்த அனுமதி வழங்கிய பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் என் நன்றிகள். மிக சிறிய குழுவிற்கு எப்படி மிக சிறப்பான வன விலங்கு பாதுகாப்பு செய்திகளை எளிமையாக வழங்க முடியும் என்பதை எனக்கு பல முறை சொன்ன முனைவர்.தானியல் மற்றும் திரு.மாரிமுத்து அவர்களுக்கும் என் நன்றிகள். மேலும் இந்த நிகழ்சிக்காக விளம்பர திரைச் சீலை (banner) செய்து வழங்கிய என் அலுவலக நண்பர் பிரவின் அவர்களுக்கும் என் நன்றிகள். இந்த நிகழ்வை தினமணி, தினமலர் மற்றும் தி இந்து செய்தித்தாள்களில் பிரசுரிக்க உதவிய  ஊடக நண்பர்களுக்கும் என் நன்றிகள்.      



ஓவ்வொரு சிறிய விலங்குகளும் இந்த சூழலுக்கும், காடுகளுக்கும் மிகப் பெரிய உதவி செய்து வருகின்றது. அதிகம் கவனிக்கப்படாத விலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருந்தது.    

பிரவின் குமார் 
கோயம்புத்தூர் 

தொடரும் நம் சூழல் பயணங்கள் 22


கல்லூரி மாணவர்களிடம் ஒரு கலந்துரையாடல் - ஆழ்வார்க்குறிச்சி

திருநெல்வேலி, நாணல்குளம் வௌவால் விழிப்புணர்வு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மதிய வேளையில் ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரிக்கு வந்தேன். கல்லூரி முதல்வர் முனைவர். ரஞ்சித் சிங் அவர்களை சந்தித்து விட்டு இளங்கலை உயிர் தொழில் நுட்பவியல் துறைக்கு சென்றேன். செல்லும் வழியில் நுண்ணுயிரியல் துறையில் என் ஆசிரியர் முனைவர். விஸ்வநாதன் அவர்களையும், விலங்கியல் துறையில் முனைவர்.சுதாகர் அவர்களையும் சந்தித்தேன். முனைவர்.சுதாகர் அவர்கள் கடந்த பல வருடமாக வௌவால்கள் பற்றிய ஆராய்ச்சிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   

அப்படியே நான் பயின்ற உயிர் தொழில் நுட்பவியல் துறைக்கு வந்தேன். என் நண்பன் பாலாவை சந்தித்து விட்டு, துறைத்தலைவர் முனைவர். இராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்து விட்டு, ஏற்கனவே திட்டமிட்டபடி மூன்று ஆண்டு மாணவர்களுக்கும் உயிரி தொழில் நுட்பவியல் பற்றியும், வேலைவாய்ப்புகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்தும் சில தகவல்களை வழங்குவதற்காக சென்றேன். மிக முக்கியமாக எப்படி ஆராய்ச்சிகள் நமது பகுதியில் உள்ள சமுகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என்று சில உதாரணங்களுடன் சொன்னேன். 

பின்பு அவர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தி அறிவியலை எளிமையாக, ஆர்வமாக கற்க வேண்டும் என சொன்னேன். இந்த கலந்துரையாடலில் எனக்கு தெரிந்த சில தகவல் மூட்டைகளை அவர்களிடத்தில் சொல்ல செல்லவில்லை. அவர்களிடத்திலே புதைந்து உள்ள கேள்வி கேட்கும் திறனையும், அடிப்படை அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக இந்த கலந்துரையாடல் இருந்தது.   

மிக முக்கியமாக சென்னை ஐ.ஐ.டி, சென்னை பல்கலைக்கழகம். பெங்களுரு NCBS, பயோக்கான் போன்ற பெரிய கல்வி மற்றும் ஆய்வு நிலையங்களில் உள்ள பல மாணவர்கள் இந்த கிராமப் பகுதியை சார்ந்தவர்கள். பலரும் அடிப்படை கல்வியை இங்கு படித்தவர்கள் ஆவர்.                     

அறிவியல் ஆர்வம், ஆங்கில சரளம் இரண்டும் மிக அவசியம் எனவும் சொன்னேன். ஆராய்ச்சிப் படிப்புகள் (உணவு, தோல், மருத்துவத்துறை, நுண்ணுயிரி, மரபு பொருளியல் மற்றும் பல) பற்றியும் சில செய்திகளை சொன்னேன். 



இந்த சிறிய கலந்துரையாடலுக்காக என்னை அழைத்த முனைவர். இராம கிருஷ்ணன் அவர்களுக்கும், என் நண்பன் பாலாவிற்கும் என் நன்றிகள். நான் இந்த கல்லூரியின், இந்த துறையின் பழைய மாணவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். 

படிப்போம் இன்னும் ஆர்வமாக …

பிரவின் குமார்   
கோயம்புத்தூர்