About

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, 28 April 2015

தொடரும் நம் சூழல் பயணங்கள்: 41


வெளவால்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி் - சிவகாசி


கடந்த பிப்ரவரி  9 அன்று வௌவால்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிவகாசியிலுள்ள ‘சுருதி வித்யோதயா’ பள்ளியில் நடத்தினேன்.  இந்த நிகழ்ச்சி வெளவால்களை அறிந்து கொள்வதும், பாதுகாப்பதற்குமானது.  நிகழ்வை பள்ளி முதல்வர் துவக்கி வைத்தார்கள்.  முதலில் என்னைப் பற்றி சொல்லிவிட்டு ஒரு சில மாணவ-மாணவிகளை அறிமுகம் செய்து கொள்ளச் செய்தேன்.  தங்கள் பெயர், வகுப்பு, கடைசியாக தாங்கள் வெளவால்களைப் பார்த்த இடம் போன்றவற்றைச் சொன்னார்கள்.  பின்பு அழிவில் காடுகள் வீடியோவைக் காட்டி விட்டு 5 வகை உயிர்க் குழுக்கள் பற்றியும், உணவுச் சங்கிலி பற்றியும் சொன்னேன்.  பின்பு மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம், அங்குள்ள பல அரிய விலங்குகள் பற்றியும் சொன்னேன்.  பின்பு நம் காடுகளிலிருந்து அழிந்து போன சிவிங்கிப் புலி பற்றி சொன்னேன்.  




பின்பு 6 குழுக்களுக்கிடையில் ஒரு குழு விளையாடச் செய்தேன். அப்புறம், பாலூட்டிகள் என்றால் என்ன? வரையறை, இந்திய பாலூட்டிகள், சாதாரணமாக பார்க்கக் கூடியவை, அரிதாய் காண்பவை என எடுத்துச் சொன்னேன்.  பின்பு மீண்டும் 6 குழுக்களைப் பிரித்து தலைவரை தேர்ந்தெடுத்தேன். நான் ஒவ்வொரு குழுவிற்கும், வெளவால் தகவல் பெட்டகத்தை வழங்கினேன்.  




பின்பு வெளவால் பற்றி பல தகவல்களை வரிசையாக விளக்கினேன்.  படங்கள், அட்டைகள், மற்றும் உதாரணங்களுடன் நான் விளக்கினேன். பின்பு 10 நிமிட நேரம் கொடுத்தேன்.  குழுத் தலைவர்களும் ஒருவர், ஒருவராக 3-5 நிமிடம் வரை வெளவால்கள் பற்றியும், பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் சொல்லி கைத்தட்டல்களுடன் சென்றனர்.




வெளவால் பாதுகாப்பு தொடர்பாக நாங்கள் ஒரு உறுதி மொழி எடுத்தோம். பின்பு 3 படங்களுடன் வகுப்பு நிறைவடைந்தது. மாணவர்களின் ஈடுபாடும் ஆர்வமும் சிறப்பாக இருந்தது.  நிகழ்ச்சியை முடித்துவிட்டு நான் சிவகாசி எக்ஸனேரா. லதா அபிரூபன் அவர்களைச் சந்தித்துவிட்டு சிவகாசியிலிருந்து பேருந்தில் புறப்பட்டேன். அனைவரின் ஒத்துழைப்போடு இந்த நிகழ்ச்சி இங்கு சிறப்பாக நடந்து முடிந்தது.





அன்புடன்
ஆர். பிரவின் குமார்.
கன்னியாகுமரி.


தொடரும் நம் சூழல் பயணங்கள் 40



நன்னீர் பல்லூயிரியம் - குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி - 
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

கடந்த பிப்ரரி 9ம் தேதி, சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தேன்.  இதில் இளநிலை உயிர் தொழில் நுட்ப மாணவர்களும், பாலிடெக்னிக் மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர். திரு.கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார். 



இந்த நிகழ்ச்சியை நடத்த சிவகாசி எக்ஸனோரா திருமதி. லதா அபிரூபன் அவர்களின் உதவி சிறப்பானது.

நிகழ்ச்சியில் நன்னீர் வாழ்வாதரங்கள், பாதுகாக்க வேண்டியதன் அவசியம், நன்னீரில் வாழும் சில வகை உயிரிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை பற்றி சில செய்திகளை நான் கூறினேன்.  முதலில் ஒரு சிறிய அறிமுகத்தோடு வகுப்பை தொடர்ந்து நன்னீர் அவசியம் குறித்துச் சொன்னேன்.  பின்பு நன்னீர் வாழ்வாதாரம் பற்றியும் உயிரினங்கள் பற்றியும் எடுத்துச் சொன்னேன்.  பின்பு மேற்குத் தொடர்ச்சி மலையைப் பற்றி தகவல்களைச் சொல்லிவிட்டு, மேற்கு தொடர்ச்சி மலை வரைபட நிகழ்வை இரண்டு குழுக்களுக்கிடையில் நடத்தினேன். 

1. மேற்குத் தொடர்ச்சி மலை உள்ள மாநிலங்கள். 
2 . மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கிய ஆறுகள்.  
மாணவ- மாணவிகள் இந்த நிகழ்வில் ஆர்வமாக கலந்து கொண்டனர்.  சிறிய வீடியோ ஒன்றைக் காட்டிவிட்டு, பின்பு 5 வகை உயிர் குழுக்களைப் பற்றிச் சொன்னேன்.  பின்பு தட்டான்கள், நத்தை , சிலந்தி, நண்டுகள், மீன்கள் மற்றும் நீர்வாழ் தாவரங்கள் பற்றிச் சொன்னேன்.  அவற்றின் சூழல் நன்கைளை அவர்களுக்கு புரியும் வண்ணம் சுலபமாக விளக்கினேன்.



பின்பு மேற்கு தொடர்ச்சி மலையின் சில தனித்துவமான இடங்களில் வசிக்கம் சில தனித்துவமான உயிரினங்கள் பற்றியும் அவைகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் சுருக்கமாகச் சொன்னேன்.


பின்பு சோலைக் காடுகளைக் காப்போம்’ என்ற வீடியோவை திரையிட்டு காட்டினேன். வர்களிடம் குழு உரையாடலைக் ஆரம்பித்தேன்.  “நம் நன்னீர் பாதுகாப்பை உறுதி செய்ய முதலில் நாம் செய்ய வேண்டியது எது?” என்று கேட்டதும் பதில் சட்டென வந்தது.  "சார், நம்ம குளங்களை தூர் வாறனும்"  "நம்ம நன்னீரை அசுத்தப் படுத்தக் கூடாது". "நாம நன்னீர் நிலைகளை சுத்தி மரம் நட வேண்டும்" "தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தணும்" எனச் சொன்னார்கள் கைத் தட்டல்களைப் பெற்றனர்.




மேலும் அடிப்படை ஆராயச்சிகள், நன்னீர் மேலாண்மை மற்றும் சட்டங்கள் மூலமாக நன்னீர் நிலைகளையும் அதை நம்பியுள்ள உயிர்களையும் பாதுகாக்க முடியும் எனச் சொன்னேன். பின்பு காந்தியடிகள் மற்றும் தலாய் லாமா அவர்களின் சூழல் சிந்தனைகளைச் சொல்லிவிட்டு, அனைவரும் சேர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டோம்.



அனைவரின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. ஈகோ கிளப், சிவகாசி எக்ஸ்னோரா மற்றும் ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரிக்கும் என் நன்றிகள்!

பிரவீன் குமார்,
கன்னியாகுமரி. 

Monday, 27 April 2015

தொடரும் நம் சூழல் பயணங்கள்: 39


வனவிலங்கு ஆராய்ச்சிப் பயிற்சிப் பட்டறை – சீனா.

கடந்த மாதத்தில் உலகளாவிய வனவிலங்கு ஆராய்ச்சி சம்பந்தமான ஒரு அரிய பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. 






இது சீனாவின் தலைநகர் ‘பிஜிங்’ நகரில் நடைபெற்றது.  இதனை ‘ஐ எஸ் இசட் எஸ்’ எனப்படும் international society for zoological sciences எனும் சீன அமைப்பு எடுத்து நடத்தியது.  இது 11 நாட்கள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 17 நாடுகளாகச் சார்ந்த நூற்றுக் கணக்கான இளம் வனவிலங்கு ஆய்வு மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பட்டயப்படிப்பு மணவர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து மொத்தம் 8 பேர் கலந்து கொண்டோம் என்பது குறிப்பிடத்தக்கது.







இந்த நிகழ்ச்சியில் புதிய வனவிலங்கு ஆராய்ச்சிக் கோட்பாடுகள், புதிய வழிமுறைகள், திட்டங்கள் , கவனத்தில் கொள்ள வேண்டிய நுட்பங்கள், அடிப்படை தேவைகள் என ஒரு ஒருங்கிணைந்த வனவிலங்கு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குறித்த தகவல்களை உள்ளடக்கிய ஒரு பயிற்சிப் பட்டறையாக இருந்தது.




எனது முதல் வெளிநாட்டுப் பிரயாணமாக இருந்த போதிலும், நான் இதில் முழுமையாக கலந்து கொண்டு பயனடைந்தேன்.


முதலில் Giant Panda எனப்படும் பெரிய ‘பாண்டா கரடி’ கள் சீனாவில் எங்கெங்கு உள்ளது, அவற்றின் எண்ணிக்கை வாழிடம், சிறப்பியல்பு, அழிவிற்கான காரணங்கள் என ‘வெய்’ சுருக்கமான கூறினார். மேலும் 50 வகை மூங்கில் மரங்களின் இலை, தண்டுகளை பாண்டா கரடிகள் விரும்பு உண்கிறது எனவும் கூறினார்  அப்படியே பல்வேறு கரடிகள் சில குறிப்பிட்ட இடங்களில் அதுவும் எண்ணிக்கை மிகவும் சிதலடைந்து, துண்டாக்கப்பட்டு அபாயத்தில உள்ளதாகவும் கூறினார். விஞ்ஞானி பூமென் வெய் - கடந்த 30 வருடங்களாக சீனாவின் “பாண்டா கரடி’களைப் பற்றியும், அவற்றின் வாழ்க்கை முறையைப் பற்றியம் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்.





பின்பு விலங்குகளின் நரம்பு மண்டலம் பற்றியும், சமூக செயல்பாடு பற்றியும் , DNA பாரிணாமங்கள் பற்றியும் சுவாராஸ்ய வகுப்புகள் இருந்தன.



பின்பு விலங்குகள் நகர்தல் - சூழ்நிலையியல் பற்றியும் உணவு உண்ணும் முறை பற்றியும் தனித்தனி வகுப்புகள் இருந்தன.  நான் எல்லா வகுப்புகளிலும்  கலந்து கொண்டு முழுமையாகப் பயனடைந்தேன்.  பின்பு rodentia எனப்படும் கொரித்துண்ணும் பிராணிகளின் வாழ்க்கை, புல்வெளி அழிப்பினால் இவற்றிற்கு ஏற்படும் பாதிப்பு குறித்து வகுப்புகள் இருந்தன.  பின்பு எங்களுக்கு ‘இலவசமாக’ சீன விலங்கு அருங்காட்சியகத்தை காண வாய்ப்பு அளிக்கப்பட்டது.  நான் அதிகமாக நேரத்தை இங்கு செலவிட்டேன்.  பறவை, பாலூட்டி, பட்டாம் பூச்சி என, பல வருட, பழைய காலத்து வினோத விலங்குகளை கண்டேன். நம்மூர் காகம், மயில், செம்பூத்து, கொண்டலாத்தி என பல பறவைகளும், கிங் பிஸர் வகை மீன் கொத்தகளும் கண்டேன். 







என்னை மிகவும் கவர்ந்த மிக அழகான அருங்காட்சியகம் அது. மேலும், பலவகை மான்கள், புலி, பனிக்கரடி, பாண்டா கரடி, குரங்குகள் போன்றவற்றைப் பார்த்தேன்.  எல்லாவற்றிலுமே ஒருவித நேர்த்தி, அழகு இருந்ததை காண முடிந்தது. செத்துப்போன விலங்குகளில் என்ன அழகு என்று கேட்கலாம். ஆனால் எனக்கு என்னவோ எல்லாமே அழகாய்த்தான் தெரிந்தது.  




மேலும் கண் கவர் பட்டாம் பூச்சிகள், பறவைகள், பெரிய வண்டு என பார்த்து பார்த்து லயித்துப் போனேன்.  சொல்லப் போனால் எனக்கு அந்த அருங்காட்சியகத்தை விட்டு வரவே மனமில்லை. 

வந்திருந்த அனைவரையும் 6 குழுக்களாகப் பிரித்தனர்.  நான் ஒரு குழுவின் தலைவரானேன். என் குழுவில் 3 மங்கோலியர்கள், 6 சீனர்கள், 2 பாகிஸ்தானியர்கள் இருந்தனர். அவர்களிடம் பழகி, அவர்கள் என்னென்ன செய்கிறார்கள், என்ன ஆராய்ச்சிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என தகவல்களைப் பெற்றுக் கொண்டேன்.  பின்பு அன்று இரவே அனைவரும் தங்களைப் பற்றியும், அவர்கள் ஆராய்ச்சிகள் பற்றியும் 10 நிமிடம் அனைவர் மத்தியிலும் எடுத்துக் கூறினோம்.    

நானும், தமிழக சிறிய பாலூட்டிகள் குறித்த எனது களப்பணி விவரங்களையும், சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைப் பற்றியும் சொன்னேன்.


மறுநாள், எப்படி "அகொடிஸ்" வகைக் காட்டு எலிகள் மிகப் பெரிய தூரமான இடங்களுக்கு விதைகளை கொண்டு செல்கிறது என்று முனைவர் "பாட்ரிக் சான்சன்" விளக்கினார்.  இது என்னால் மறக்க முடியாத ஒரு இரவு.  மிக சுவாரஸ்யமாக இருந்தது அவரது ஆராய்ச்சி. மேலும் ஆய்வு முடிவுகள் ஆச்சர்யப்படுத்துவதாக இருந்தது.  பின்பு விலங்குகளின் எண்ணிக்கை, குழுவை கணக்கிடும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்து முனைவர் சார்லஸ் கெரப்ஸ் விளக்கினார்.
தொடர்ந்து சீனாவைத் சேர்ந்த ஆசிரியர்கள் வகுப்பைத் தொடர்ந்தனர்.  கடைசி இரண்டு நாட்கள் கொஞ்சம் ‘மொக்கை’ யாகத்தான் சென்றது 




மற்றபடி எல்லாமே சிறப்பு "உணவையும் - குளிரையும்" தவிர்த்து, அதிகமான நேரத்தை நான் “பாலுட்டிகள் ஆய்வகத்தில்" கழித்தேன். அவர்களது ஆராய்ச்சியைப் பற்றி தெரிந்து கொள்ள, தினமும் அவர்களை தேடிச் சென்றேன். சிறப்பாக கவனித்தார்கள், சொல்லி கொடுத்தார்கள். நல்ல ஒத்துழைப்பை வழங்கினார்கள். கடைசி நாளில் அங்குள்ள காட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். உலகின் இரண்டாவது மிகப் பெரிய மான் இனமான ‘Red Deer’ ஐ பார்த்து பரவசமடைந்தேன்.  





பின்பு கடைசி இரண்டு நாட்களில் 8 இடங்களை சுற்றிப் பார்த்தோம்.  சீனப் பெருஞ் சுவரைக் கண்டு வியந்தேன்.  டைமன் ஸ்குவார் மற்றும் பியர்ல் மார்க்கெட், சொர்க்க கோவில் என பல இடங்களுக்கு சென்றேhம்.  எனக்கு சீனா மிகவும் பிடித்திருந்தது.  பீஜிங் - தவிர்த்து மற்ற இடங்கிளல் வாகன நெரிசல், நச்சுப்  புகை சற்று குறைவுதான்.

எனக்கு புதிய நண்பர்கள் பலர் கிடைத்தனர். குறிப்பாக Jilong மற்றும் Yongbin.  இருவரின் அன்பில், நான் எதோ தமிழ் நண்பர்களிடம் இருப்பது போலத்தான் உணர்ந்தேன்.  அதுவும் அவர்கள் பேசும் சீன பாசை எனக்கு புரியாது,  நான் பேசும் அரை-குறை ஆங்கிலம் அவர்களுக்கு சுத்தமாக விளங்காது. இருந்தாலும் மெதுவாக  மெதுவாக பேசி நண்பர்களானோம்.  

இரண்டு ஆசிரியர்களை பார்த்தேன்.  இருவரும் மிகச் சிறப்பாக எனக்கு உதவி புரிந்தார்கள். அவர்கள் ஆராய்ச்சியைப் பற்றி விளக்கினார்கள். மேலும், சீனாவின் அரசு அறிவியல் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை கவனித்தேன்.




கூட்டம் நடந்த விலங்கியல் துறை தவிர்த்து எங்களால் வேறு எந்த துறைக்கும் செல்ல அனுமதியில்லை. இருந்தாலும் மூன்று துறைகளுக்குள்ளும் சென்று அங்குள்ள பலவகை விஷயங்களைப் பற்றி தெரிந்து கொண்டு வந்தோம்.
இப்படியாக எனது 10 நாட்கள் சீனாவில் கழிந்தது. 

பறப்பதையும் ,ஊர்வதையும் அதிகம் உண்ணும் சீனர்கள், சூப்  வகைகளை நன்றாக விரும்பி உண்கிறார்கள்.  எனக்குத்தான் சைவ உணவு சரியாகவே கிடைக்கவில்லை.

அப்புறம் ஏதோ கிடைத்த பழங்கள், காய்கறிகள் மற்றும் பழச் சாறு என சாப்பிட்டேன்.  ஒரு நாள் எனது சீன நண்பன் Jilong  என்னை நல்ல சைவ ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று சாதமும், உருளைக்கிழங்கு பொரியலும் வாங்கிக் கொடுத்தான். அதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நான் தனியாகவே அங்கு சென்றேன். சாதமும் உருளைக் கிழங்கையும் பார்க்கத்தான் என்ன மிகழ்ச்சி.  உண்டேன் நிம்மதியாக ...

திரும்பவும் எனது ஆய்வக அறைக்கு வந்தேன். Jilong எனக்கு சீனக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் எனக்கு ஒரு பெரிய வாழ்த்து அட்டையை பரிசாக அளித்தான்.





அனைவரின் ஒத்துழைப்போடு என் சீனப் பயணம் சிறப்பாக முடிந்தது.  எனது சிறப்பு நன்றிகள் சின அரசின் அறிவியல் அகாடமிக்கு.  ஏனெனில் அவர்களின் முழுமையான “ஸ்காலர்சிப்”
மூலமாகத்தான் என்னால் சென்று வர முடிந்தது. எனது அலுவலகத்திற்கும் என் நன்றிகள்.
கற்றலைத் தாண்டி பல விசயங்களை காட்டிய இடம் சீனா.  எனது ஆராய்ச்சியை உலகளாவிய அளவிற்கு எடுத்துச் செல்லவும், மற்றவர்களின் ஆராய்ச்சிகளை நான் கண்டு கொள்ளவும் இந்த சீனப்பயணம் எனக்கு உதவியது. 


இப்படிக்கு,
பிரவின்குமார்,
கன்னியாகுமரி. 


தொடரும் நம் சூழல் பயணங்கள் 38


சிறிய பாலூட்டிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி:
கன்னியாகுமரி
“நான் காணும் சிறிய பாலூட்டிகள்” என்ற தலைப்பில் மூன்று மணி நேர விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி  மாவட்டத்திலுள்ள, மிடலக்காடு என்ற கிராமத்திலுள்ள கே.டி.பி மேல் நிலைப் பள்ளியில் நடத்தினேன்.  இந்த நிகழ்ச்சியில் 7ம் மற்றும் 8ம் வகுப்பு மாண- மாணவிகள் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியை கோவை, ஷீ அவுட் ரீச் அமைப்பின் சார்பில் நான் நடத்தினேன்.  இந்த வகுப்பு வெறும் புகைப்படங்கள் மற்றும் விளக்கங்கள் மட்டும் அளிக்காமல் ‘எளிய முறையில் பல ஆக்கப்பூர்வமான கற்றல் செயல் பாடுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.



முதலில் மாணவர்கள் அறிமுகத்தோடு வகுப்பு ஆரம்பமானது. பின்பு பாலூட்டிகள் என்றால் என்ன பாலூட்டிகளுக்கான சிறப்பியல்புகள் மற்றும் வகைகள் எடுத்துக் கூறினேன்.  மேலும் அவர்களிடத்தில், அவர்கள் வசிக்கும் பகுதியை சுற்றிக் காணக் கூடிய சிறிய பாலூட்டிகளைப் பற்றி தகவல்களை கேட்டறிந்தேன்.  பின்பு, அனைவரையும் 8 குழுக்காளாகப் பிரித்து, புதிர் விளையாட்டை விளையாடச் செய்தேன்.  அப்படி பேசி அணிகள், கீரீகள், வெளவால்கள், முயல்கள் மற்றும் முள்ளெலிகள் குறித்த தகவல்களை கதை போலச்  சொன்னேன்.  பின்பு காடுகளிலும், காட்டை ஒட்டிய புதர் நிலங்களிலும்  வசிக்கும் மற்றுமொரு விலங்கு ‘அலுங்கு’ பற்றி கேட்டேன்.  பலரும் இதைப் பற்றி கேள்விப் பட்டிருக்கவில்லை. பின்பு அதனுடைய புகைப்படத்தைக் காட்டி அதனுடைய சிறபபியல்புகள் சொல்லி ‘ஐலஷா’ என்ற பாடலை பாடச் செய்தேன்.  


பின்பு மறுபடியும் அனைவரையும் 8 குழுக்களாகப் பிரித்து, குழுவிற்கு ஒரு குழுத் தலைவரை நிர்ணயித்தேன்.  இப்போது, சிறிய சிறிய துணுக்களாக "பாலூட்டி" தகவல்களை சொன்னேன். பின்பு ஒரு வீடியோவை காட்டினேன். 


குழுவிற்கு ஒரு ‘வெளவால் தகவல் பெட்டகத்தை அளித்தேன்.  பத்து நிமிட இடைவெளிக்கு பிறகு குழுத் தலைவர்களை இப்போது பேசத் தயாராக்கினேன்.  குழுத் தலைவர் ஒருவர் ஒருவராக வந்து, மூன்று - நான்கு நிமிடம் சகஜமாக அவர்கள் இன்றைய வகுப்பில் கற்றுக் கொண்ட பாலூட்டிகள் குறித்த தகவல்களை அனைவரின் முன்பும் சொல்லி கைத் தட்டல்களைப் பெற்றுச் சென்றனர்.  பின்பு நாங்கள் அனைவரும் சேர்ந்து வனவிலங்கு பாதுகாப்பு உறுதி மொழியை எடுத்துக் கொண்டோம்.







அப்படியே ஒவ்வொருவராக வகுப்பறையில் நான் காட்சிக்கு  வைத்திருந் சிறிய கண்காட்சியை பார்த்துச் சென்றனர். பள்ளி ஆசியரின் நன்றியுரையுடன் வகுப்பு இனிதே முடிந்தது. இந்த வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்கள் பலர் அருகிலுள்ள காட்டுப் பகுதியை ஒட்டி வசிப்பவர்கள் அவர்களுக்கு அதிகமாக பிடித்த பட்டாம் பூச்சிகளையும், தும்பிகளைப் பற்றி என்னிடம் பேசிக் கொண்டே இருந்தனர்.  சிலர் இந்த ஏரிக் கரையில் மீன்களை பார்த்து ரசித்ததாகவும், சிலர் பள்ளி வளாகத்தில் மரக் கன்று வைத்து பராமரிப்பதாகவும் கூறிக் பெருமைப்பட்டனர்.







இந்த குழந்தைகளுக்கு நான் ஏதோ சிறிது தகவல்களைக் கூறச் சென்றிருந்தாலும், இந்த குழந்தைகளிடமிருந்து நான் அதிகம்  கற்றுக் கொண்டேன். இயற்கை மீதுள்ள, அவர்களைச் சுற்றியுள்ள உயரினம் மீதுள்ள பாசம், எதையும் பொறுப்பாக செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை. 

மிக குறிப்பாக ஓவ்வொரு விலங்குகளின் நன்மைகளை குழந்தைகளிடத்தில் சொல்ல சொல்ல, விலங்குகள் மீது கருணை பிறப்பதையும் கவனிக்க முடிந்தது.



இந்த பள்ளிக் குழந்தைகளின் ஆராவாரத்திலும், உற்சாகத்திலும், இணைந்தே நகர்கிறது அவர்களது சூழல் தாகம்.  இனி வரும் நாடகளில் இவர்கள் பலவித சூழல் செயல்பாடுகளில் நம்முடன் இணைந்து செயல்படுவார்கள்.


இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்கிய பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்களுக்கும், ஜூ அவுட் ரீச் அலுவலகத்திற்கும், என் சிறப்பான நன்றிகள்.


அன்புடன்,
பிரவின் குமார்,
ஆய்வு மாணவர்,
நூறுல் இஸ்லாம் பல்கலைகழகம் 
குமாரகோயில் - தக்கலை 
கன்னியாகுமரி.
தொடர்புக்கு: +91  9600212487.

தொடரும் நம் சூழல் பயணங்கள்: 37


அலுங்கு விழப்புணர்வு நிகழ்ச்சி 
நாணல் குளம், திருநெல்வேலி.

கடந்த மாதத்தில் ஒரு நாள் அலுங்கு - பாதுகாப்பு விழப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை திருநெல்வேலி மாவட்டத்தின் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் அடிப்பகுதியிலுள்ள நாணல்-குளம் கிராமத்தில் நடத்தினேன். இந்த நிகழ்ச்சியில் 28 குழந்தைகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி அட்ரீ (ATREE) திரு. மதிவாணன் அவர்களின் உதவியுடன் நடைபெற்றது.  






முதலில் குழந்தைகளின் பெயர், ஊர், அவர்கள் கடைசியாக பார்த்த விலங்கு, பார்க்க ஆசைப்படுகிற விலங்கு என அனைவரிடமும் கேட்டுத் தொரிந்து கொண்டேன்.  பின்பு இந்தியாவின் காடுகள் குறித்தும், தமிழகத்தின் காடுகள், வகைகள் குறித்தும் சொன்னேன்.  பின்பு 5 வகை உயிர்க் குழுக்கள் பற்றிச் சொல்லிவிட்டு அழிந்து போன ‘டோ டோ’ பறவை பற்றி கூறினேன்.






பின்பு இந்த காட்டை ஒட்டிய அடிப்பகுதியில் வசிக்கும் சில சிறிய பாலுட்டிகள் பற்றியும், அவற்றின் உணவுச் சங்கிலியின் அம்சம் பற்றி சொன்னேன். அப்படியே ‘காடுகள்’ வீடியோவைக் காட்டிவிட்டு பாலூட்டிகள் என்றால்  என்ன? வகைகள் என்னென்ன என்று கூறினேன்.  பின்பு அலுங்குகள்  எனப்படும் எறும்பு திண்ணிகள் பற்றி வகுப்பைத் துவக்கினேன்.  வகுப்பில் ஒரு சிலரைத் தவிர பல குழந்தைகளுக்கு இதைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. எறும்பு தின்னியின் படத்தைக் காட்டி விளக்கினேன்.  இவற்றின் வகைகள், உருவம், வாழிடம், சிறப்புகள், எடை, தகவமைப்பு, உணவு என பல செய்திகளை அவர்களிடத்தில் கதை போலச் சொல்லி விளக்கினேன். பின்பு அவற்றின் ஆயுட்காலம் பற்றியும், உடலில் எடையில் 3 இல் ஒரு பங்கு செதில்கள் எனவும், அவற்றின் குறைவான பார்வைத்திறன் பற்றியும் சொன்னேன்.  






தொடரும் வேட்டையாடுதல் இந்த விலங்கை இன்று அழிவிற்கு கொண்டு போய் விட்டது எனக் கூறினேன்.  மருத்துவம், மருந்து என எண்ணற்ற அலுங்கு நம் நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் கூறினேன்.  அழிவின் விளிம்பில் உள்ள நம்மூர் அலுங்குகளைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல் குறித்து எடுத்துக் கூறினேன்.
பின்பு 5 குழுக்களாக குழந்தைகளை பிரித்து, குழுத் தலைவரை நிர்ணயித்தேன். சிறிது இடைவெளியில் பிறகு குழுத்தலைவர் அனைவரின் முன்பும் வந்து வகுப்பில் கலந்து கொண்டதை மறுபடியும் எடுத்துக் கூறினர்.





வந்திருந்த அனைவருக்கும் அலுங்கு படம் போட்டை அட்டைகளை வழங்கினேன்.  வகுப்பின் இறுதியில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம்.







மேலும் அலுங்கு பற்றிய வீடியோ ஒன்று காட்டிவிட்டு இந்த அறையில் காட்சிக்கு வைத்திருந்த சிறிய அலுங்கு குறித்த புகைப்படங்களை பார்வையிட்டனர்.  பயன் பெற்றனர்.




இந்த மாதிரியான சிறிய விலங்குகள் பற்றிய செய்திகளை பலருக்கும் தெரிவிக்க இம் மாதிரியான சிறிய விழிப்புணர்வு நிகழ்ச்சி அவசியம். வளரும் கிராமத்து குழந்தைகள் அவர்களை சுற்றி உள்ள விலங்குகளைப் பற்றி தெரிந்திருக்கவேண்டியது  அவசியம் அல்லவா !!! அதற்கு இம்மாதிரியான சிறிய நிகழ்ச்சிகள் நிச்சயம் உதவும். வன விலங்குகளை பாதுகாக்க, சூழல் அக்கறையான வளரும் தலைமுறைகளை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையோடு பிரவின்.   

அன்புடன் 
பிரவின் குமார் 
கன்னியாகுமரி.