About

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, 21 August 2013

தொடரும் நம் சூழல் பயணங்கள் IV



தொடரும் நம் சூழல் பயணங்கள் IV


கடந்த ஞாயிறு (ஆகஸ்ட் 18) நான் கொடைக்கானல் அருகிலுள்ள "பண்ணைக்காடு" என்ற கிராமத்திலுள்ள பழங்குடி குழந்தைகள் காப்பகத்திற்கு "வௌவால்களும் அவற்றின் அவசியமும்" என்ற ஒரு நாள் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். இந்த பழங்குடி குழந்தைகள் அனைவரும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள், கடந்த மூன்று வருடங்களாக இங்கு தங்கி இருக்கிறார்கள், பண்ணைக்காட்டில் உள்ள அரசு பள்ளியில் படிக்கிறார்கள்.   

நான் செல்லும் முன்னே அவர்கள் அனைவரும் வகுப்பில் இருந்தார்கள். காலை பத்து மணிக்கு நிகழ்ச்சியை தோழர். அசோக் ராஜன் தொடங்கி வைத்தார். 


நான் கொண்டு வந்திருந்த புத்தகங்களையும், அட்டைகளையும் பார்வைக்கு வைத்துவிட்டு, மிக இயல்பான, எளிமையான சுற்றுச்சூழல் அறிமுகத்தோடு வகுப்பை ஆரம்பித்தேன். 


பங்கேற்பாளர்கள் அனைவரும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு, தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். 



பின்னர், கொடைக்கானலில் உள்ள விலங்குகளை பற்றியும், விலங்குகளின் முக்கியத்துவம் பற்றியும் சொல்லி விட்டு, அவர்களை ஐந்து குழுக்களாக பிரித்து, "அட்டைகளை சேர்த்தல்" விளையாட்டு விளையாடினோம். 


பின்னர் குழு தலைவர், அவர்கள் சேர்த்த விலங்கின் பெயரையும், அவற்றின் சூழல் நன்மைகளையும் சொன்னார்கள்.




"நம் காடுகள்" "அழியும் விலங்குகள்" என்ற காணொளியை காண்பித்துவிட்டு, அடுத்த நிகழ்வான "கேள்வி பதில் 10" பகுதிக்கு சென்றேன். 


பங்கேற்பாளர்களுக்கு பத்து கேள்விகள் கேட்கபட்டு, அவர்கள் பதில் சந்தோசமாக இருந்தால் அதற்குரிய இடத்திலும், வருத்தமாக இருந்தால் அதற்குரிய இடத்திலும், நடுநிலையாக இருந்தால் அதற்குரிய இடத்திலும் சென்று நிற்க வேண்டும். இதில் பெரும்பாலும் அனைவருமே எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்து, மிக உற்சாகமாக கலந்துகொண்டனர். 


ஒவ்வொரு சிறிய, பெரிய விலங்குகளின் அவசியமும், அவற்றின் நன்மைகள் பற்றி விளக்கும் பாடல் ஒன்றை பாடி காட்டிவிட்டு, மதிய உணவை அவர்களுடன் சாப்பிட்டேன். 


பின்னர் குழந்தைகளுக்கு, "இயற்கை" காணொளியை காண்பித்துவிட்டு, energizer என்ற ஒரு சிறிய விளையாட்டை அறிமுகப்படுத்திவிட்டு, அடுத்த நிகழ்விற்கு சென்றேன். 

மரங்கள் பற்றி அவர்கள் பல செய்திகளை சொன்னார்கள், நான் கொஞ்சம் அவேர்களுக்கு தெரியாத துணுக்குகளை சொல்லிவிட்டு, இன்றைய வகுப்பின் தலைபிற்குள் சென்றேன். ஆம். வௌவால்கள். 



அவர்களில் சிலர் வௌவாலை பிடித்து, சுட்டு உண்பதாகவும், அடிக்கடி இறைச்சிக்காக பிடிப்பதாகவும் சொன்னார்கள். தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள தொடர்பைச் சொல்லிவிட்டு, வௌவால்கள் குறித்த தகவமைப்பு, அவற்றின் குணங்கள், வாழிடம், வகைகள், சிறப்பியல்புகளை சொன்னேன். 


அனைவரும் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு, Zoo Outreach Organization வழங்கிய வௌவால் அட்டைகள் அடங்கிய சிறிய பாக்கெட்டை (BAT EDUCATION) கொடுத்து, அவர்களுக்கு புரியும் வண்ணம் வௌவால் குறித்த நிறைய தகவல்களைச்  சொன்னேன். 


"வௌவால்க்காக தீபாவளியன்று பட்டாசை தியாகம் செய்த கிட்டாம்பாளையம் கிராமம்" என்ற ஒரு உண்மை செய்தியை இந்த குழந்தைகளுக்கு சொல்ல மறந்துவிட்டேன். 


வௌவால் பொம்மை மூலமாக சில கருத்துகளை சொன்னேன். இந்த குழந்தைகள் மிக சுலபமாக புரிந்துகொண்டனர், என்னிடம் சில கேள்விகளும் கேட்டனர். உலகத்தில் மிக பெரிய வௌவால் - பற்றிய ஒரு சிறிய வீடியோவை காண்பித்தேன். அப்புறமாக வௌவால் அழிவிற்கு காரணிகள், அதை எவவாறு நாம் பாதுகாக்கலாம் என்பன போன்ற சில கருத்துக்களை சொன்னேன். 


கடைசியாக அனைவரும் எழுந்து நின்று நம் காடுகளையும், விலங்குகளையும், குறிப்பாக இந்த பழந்தின்னி வௌவால்களையும் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக்கொன்டனர். 


தோழர் அசோக் ராஜன் நன்றி உரையுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார். 

அடிப்படையில் இந்த குழந்தைகள் எப்போதும் சூழல் மேல் அக்கறை உள்ளவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களுக்கு விலங்குகள், தாவரங்களை இனம் கண்டறியும் அடிப்படை உக்திகள் தெரிகிறது, நான் கண்டேன்.

இந்த கொடைக்கானல் வனங்களிலே வாழும் இவர்களை மேலும்  மேலும் ஊக்குவித்தால் நிச்சயம் இந்த வனத்தையும், விலங்குகளையும் பாதுகாக்கும் ஒரு நல்ல மாணவர்களாக, அடிப்படை அறிவியல் மேல் ஆர்வம் உள்ள இளம் ஆராய்ச்சியாளர்களாக உருவாகலாம். 


துள்ளலான குழந்தைகள், ஓயாமல் பெய்த மழை, அமைதியாய் அசையும் மரங்கள், ஆரவாரத்தில் நான்..அதே சந்தோசத்துடன்...இந்த நாள் மிக சிறப்பாக அமைந்தது. 


இந்த நிகழ்ச்சிக்காக எனக்கு BAT EDUCATION POCKET வழங்கிய என் ஜூ அலுவலக, ஆசிரியர்கள் தானியல் மற்றும் மாரிமுத்து அவர்களுக்கும் என் நன்றிகள். 

                                                        **********************

Tuesday, 13 August 2013

தொடரும் நம் சூழல் பயணங்கள் III




தொடரும் நம் சூழல் பயங்கள் III

கடந்த ஞாயிறு (ஆகஸ்ட் 11) நானும் என் தோழியும் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள பில்லூர் என்ற மலை கிராமத்திற்கு, குழந்தைகளுகான சுற்றுச்சூழல் நிகழ்ச்சிகளுக்காக சென்றிருந்தோம். பில்லுரில்  உள்ள கி ஸ்டோன்- அலுவலகத்தில் நிகழ்ச்சி நடந்தது. மேட்டுப்பாளையத்திலேருந்து நாங்கள் கி-ஸ்டோன் வாகனத்தில், காட்டின் வழியே, கரடு முரடான பாதை வழியாக பில்லூர் போய் சேர்ந்தோம். இந்த சாலையில் போகும் போது "எப்படித்தான் இந்த பகுதி மக்கள் இந்த ரோட்டில் போகிறார்கள்" என்ற உணர்வு வந்தது.  

                      


இந்த ஊர் மிக அழகாகவும், அதிகம் ஆள் நடமாட்டமில்லாததாக இருந்தது. "வன விலங்குகளும் காடுகளும்" என்ற பொதுவான தலைப்பில் நிகழ்ச்சியை வடிவமைத்திருதோம். நாங்கள் வனவிலங்குகளின் அட்டைகளை சுவற்றில் ஒட்டி கொண்டிருந்தோம். குழந்தைகள் ஒருவர் ஒருவராக வந்துகொண்டு இருந்தனர். மிக எளிமையான சுற்றுச்சூழல் அறிமுகத்துடன் குழந்தைகளுடன் கலந்துரையாடினோம். 

                      


எப்போதும் நாம் குழந்தைகளை அறிமுகபடுத்தும் அதே Know each other விளையாட்டு மூலமாக அவர்களை பற்றி தெரிந்து கொண்டோம். பின்னர் "வன விலங்குகள்" என்ற தமிழ் வீடியோ காண்பித்துவிட்டு, அவர்களை சுற்றி உள்ள விலங்குகளை பற்றி சில செய்திகள் சொன்னோம்.  

பின்னர் ஐந்து வகை உயிர் குழுக்களை பற்றி அட்டை மூலமாக விளக்கினோம். பின்னேர் அவர்களையும் திரும்ப சொல்ல சொன்னோம். அப்புறமாக "ஐலசா" என்று முடியும் ஒரு நாட்டுப்புற குழு பாடலைப் பாடிவிட்டு  அதன் கருத்துகளை கூறினேன்.  பறப்பன, ஊர்வன, இருவாழ்விகள், மீன்கள், பாலுட்டிகள் பற்றி உதாரணங்களை சொல்லிவிட்டு, தவளையின் வாழ்க்கை சுழற்சியை படம் மூலமாக விளக்கிச் சொன்னேன். 


பின்னர் energizer என்ற ஒரு சிறிய விளையாட்டை முடித்துவிட்டு, அடுத்த அடுத்த நிகழ்வான "குழு வரைபடம்" பகுதிக்கு சென்றோம். 

                       

மதிய உணவுக்கு பின்னர் பங்கேற்பாளர்கள் அனைவரும் ஐந்து குழுவாக பிரிந்து "சூழல் மாசுபாட்டில் நம் விலங்குகள்" என்ற தலைப்பிற்கு ஏற்றவாறு படம் வரைந்து, அதன் விளக்கங்களை அனைவருக்கும் புரியும் வண்ணம் சொன்னார்கள்.








அப்புறமாக வௌவால், தவளை, பூச்சி மற்றும் தேனீ, பொம்மைகள் கொண்டு அவற்றின் சூழல் முக்கியத்துவம் பற்றி சொன்னோம். 

முக்கியமாக வௌவால் குறித்த தகவல்களை குழந்தைகள் மிக சுலபமாக புரிந்து கொண்டு, கேள்விகளையும் கேட்டார்கள். எளிமையாக புரியும் வண்ணம் குழந்தைகளுக்கு சொல்லிவிட்டு, சூழலை காப்பதில் நம் பங்கு என்ன என்பதை கூறிவிட்டு "காடு அழிவு" பற்றி வீடியோ காண்பித்தேன்.

பின்னர் அனைவரும் எழுந்து நின்று, நம் காடுகளையும், நம் விலங்குகளையும் பாதுகாக்க உறுதிமொழி எடுத்து கொண்டோம். அனைவர்க்கும் விலங்கு அட்டைகளும், பென்சில்களும் வழங்கிவிட்டு, நன்றியுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தோம்.

  

இந்த நிகழ்ச்சிக்காக எனக்கு உதவிய கி- ஸ்டோன் நண்பர்களுக்கும், Zoo Outreach ல் உள்ள உயர்திரு. டேனியல் மற்றும் உயர்திரு.மாரிமுத்து ஆகியவர்களுக்கும் என் நன்றிகள். 


இந்த நிகழ்ச்சிக்காக பிரத்யோகமாக, இனிப்புகளை வழங்கிய 

என் நண்பன் 

நவீன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

மிக சிறப்பான மனிதர்களால் மிக சிறப்பான, சிறந்த செயல்களை 

செய்யமுடியும். நாம் 

அனைவரும் மிக சிறப்பானவர்களாக மாற என் வாழ்த்துக்கள். 

*****************



Monday, 5 August 2013

தொடரும் நம் சூழல் சந்திப்புகள் II



தொடரும் நம் சூழல் சந்திப்புகள் II 


கடந்த ஞாயிறு (28 ஜூலை) அன்று திருநெல்வேலியில் உள்ள The Florence Swainson Higher Secondary School for the deaf க்கு ஒரு சுற்றுச்சூழல் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன்

எப்போதும் போல அதே சந்தோசத்துடன், நானும் என் தோழர் வெங்கடேஷ் பாபுவும் வகுப்பறையை, தலைப்பிற்கு ஏற்றவாறு தயார் செய்தோம். கொண்டு வந்திருந்த அட்டைகளை ஒட்டிவிட்டு தலைமை ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தோம். இந்த பள்ளிதான் 2004 வருடத்திற்கான மாநில சூழல் விருதை பெற்ற பள்ளி, சூழல் அக்கறை பற்றி கவனத்துடன் செயல்படும் பள்ளி எனவும் தெரியவந்தது. இந்த அறை "சுற்றுச்சூழல் பரப்பு மையம்" என்ற பெயரை தாங்கி நிற்க்கிறது. இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உதவியுடன் சூழல் குறித்த எண்ணற்ற பதாகைகள் இருந்தன. மேலும் தமிழ்நாட்டின் தேசிய விலங்கு, பூ, மரம், பறவை படங்கள் பளிச்சென தெரிந்தது.   

"உங்களை சுற்றி விலங்குகள்" என்ற தலைப்பில் நான் பேசுவதற்காக தயாரானேன்

சுமார் அறுபது மாணவ மாணவியர்கள் அறையில் இருக்க, தலைமை ஆசிரியரின் சுற்றுச்சூழல் அறிமுகத்தோடு நிகழ்ச்சி ஆரம்பமானது



தோழர் வெங்கடேஷ் பாபுவிற்கு ஐந்தாவது நிகழ்ச்சி (இதே பள்ளியில்) எனவே அவர் குழந்தைகள் அனைவரையும் மிக சுலபமாக புரிந்துவைத்திருந்தார்.மேலும் மிக எளிமையாக- தன்னம்பிக்கை, கற்பனைசக்தி, வெற்றி போன்ற தலைப்புகளின் அவருக்கே உரிய மாறுபட்டு சிந்திக்கும் திறனுடன் குழந்தைகளுடன் பேசினார். மாணவர்களும் மிக எளிமையாகவும், சகஜமாகவும் வகுப்பில் இருந்தனர். அவருடைய ஒவ்வொரு கருத்துகளையும் மொழிபெயர்ப்பாளர் அக்கா விரைவாக குழந்தைகளுக்கு சொன்னார்பின்னர் நான் நம்மை சுற்றி இருக்கும் விலங்குகள் பற்றி அவர்களிடம் கேட்டுவிட்டு, ஒரு சிறிய சூழல் விளையாட்டு நடத்திவிட்டு "தேன்சிட்டுவின் கதை" காணொளியை காண்பித்தேன்
அனைவரும் ஆர்வத்துடன் பார்த்து குதூகலித்தனர்

பின்பு, மரங்களின் பயன்பாடு மற்றும் மருத்துவகுணமுள்ள தாவரங்கள் பற்றியும் அவர்கள் நிறைய தகவல்களை சொன்னார்கள் . நானும் அதை தொடர்புடைய தகவல்களை சொன்னேன்


பின்னர், குழந்தைகளுக்காக நான் கொண்டுசென்றிருந்த பூச்சி, தவளை, வௌவால், தேனீச்சீ பொம்மைகளை (Finger Puppets) காட்டி அவற்றின் முக்கியத்துவம், சூழல் சமநிலையில் அவைகளின் பங்கு குறித்து சில தகவல்களை சொன்னேன்

நாளை புலி நாள் (Tiger Day) என்பதால் கொஞ்சம் புலிகள் பற்றி சொல்லிவிட்டு, சேகர் தத்தாத்ரியின் 'புலிகள் பற்றிய உண்மை' என்ற ஆவணப்படம் போட்டு காண்பித்தேன்



கடைசியாக Zoo Outreach, விலங்கு வாழ்த்து அட்டைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தோழர் வெங்கடேஷ் பாபுவின் (Eventura) மூலமாக மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தலைமை ஆசிரியரின் நன்றிகளுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்ததுஇந்த குழந்தைகளுடைய சிறப்பான செயல் செய்யும் திறன், கற்பனை சக்தி, மன திடம், அனைவரையும் அரவணைக்கும் பண்புகளை கண்டு சந்தோஷப்பட்டோம். இனி வரும் காலங்களில் இவர்கள் நிச்சயம் ஒரு சூழல் மேல் அக்கறை உள்ளவர்களாக வருவார்கள்.



இந்த நிகழ்ச்சிக்காக அனைத்துவித கருத்துகளையும் வழங்கிய மதிப்பிற்குரிய என் ஆசிரியர்கள் டேனியல் மற்றும் மாரிமுத்து அவர்களுக்கு என் நன்றிகள்தோழர் வெங்கடேஷ் பாபு, மற்றும் தலைமை ஆசிரியர்  அவர்களுக்கும் என் நன்றிகள். 

வாழ்த்துகளுடன், 
பிரவீன் 

Tuesday, 30 July 2013

தொடரும் நம் சூழல் பயணங்கள்: I


தொடரும் நம் சூழல் பயணங்கள்: I


கடந்த சில வாரங்களாக பல்வேறு அலுவலக பணிகளுகிடயிலும் எதோ ஒரு மிக பெரிய சந்தோசம் என்னை தொற்றி கொண்டது. என்ன என்று யோசிக்கும் போதுதான் ஓ! குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் வகுப்பு எடுக்க போறன்..அதனாலதானு  தெரிஞ்சுது....ஒரு இருபது நாளுக்கு முன்பு நாகர்கோவில்ல ஒரு காட்டு எலி பத்தி ஆராய்ச்சி முடிஞ்சிட்டு வந்த கையோட ரிப்போர்ட் எழுத வேண்டியும் இருந்துச்சு. அப்போதான் நானும் நீலகிரி இயற்கை வரலாறு சங்கமும் சேர்ந்து - ஒரு நாள், பழங்குடி குழந்தைகளுக்கு "உயிரினங்கள் அவசியம்" பற்றி ஒரு நிகழ்ச்சி நடத்த யோசிச்சோம். நாங்க இந்த நிகழ்ச்சிய சிற்ப்பா பண்ணனும்னு யோசிட்டே நாள் பிக்ஸ் பண்ணி  தயாரானோம். நிகழ்ச்சி தொடங்கும் நாள் வெகு அருகிலே வர ..நான் நிகழ்சிக்கு தேவையான பொருள்களை என் அலுவலகத்தில் (Zoo Outreach) இருந்து பெற்றுகொண்டேன்.

காலை நிகழ்சிக்கு, நான் முந்தின நாள் இரவே அங்கு போய்விட்டேன்.  நிகழ்ச்சி நடக்கும் இடம் உதகமண்டலம்,  இரவு நான் தங்கியது கோத்தகிரியில்....காலை எழுந்து என் உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு, நிகழ்சிக்கு ஒரு முறை ஒத்திகை செய்துவிட்டு கிளம்பினேன்...என் தோழி எனக்காக கோத்தகிரியில் காத்திருந்தாள். என் தோழியும் நானும்  காரில் சரியான நேரத்தில் நிகழ்விடத்திற்கு சென்று சேர்ந்தோம்...எங்களுக்கு மிக அருகிலே குழந்தைகள் ஆரவாரமாய் குதூகலிக்க, நானும் அங்கே சிறிது நேரத்தில் ஒரு குழந்தைகளாகவே மாறிப்போனேன். நான் சென்ற இடம் தேனீ அருங்காட்சியகம். அழகும், நேர்த்தியும் சேர்ந்த அந்த இடம் என்னை மிக கவர்ந்தது. கடுங்குளிரில் நான் வகுப்பிற்குள் சென்றேன். அங்கு பல வண்ண வண்ண பட்டாம்பூச்சி குழந்தைகளையும், சுவற்றில் இருந்த தேனீகளையும்  பார்த்தவுடனே நான் மிக ஒரு காட்டில் இருப்பதாக உணர்தேன். 

சந்தோஷமான காலை வணக்கத்துடன் இயல்பாக சூழல் அறிமுகத்துடன்  வகுப்பு தொடங்கியது. வந்திருக்கும் 36 குழந்தைகளும் அருகிலுள்ள மலை கிராமத்தை சேர்ந்தவர்கள். எனக்கு இவர்களை யார் என தெரியாததால் " Know each other" விளையாட்டு மூலம் அவர்களை தெரிந்துகொண்டேன். 


பின்பு ஐந்து வகை உயிர் குழுக்களை பற்றி சொல்லிவிட்டு, அவர்களையும் திரும்ப சொல்ல சொல்லி, நானும் சொல்லிக்கொண்டேன். அவர்களின் உற்சாகமும், உன்னிப்பான கவனமும் என்னை மிக சிறப்பாக செயல்பட தூண்டியது.




தேநீர் இடைவேளைக்கு பின்பு "வங்காரி மாதாய்"  தேன் சிட்டு- காணொளி காண்பித்துவிட்டு, குழந்தைகளுடன் நான், நீலகிரி உயிர்க்கோள காப்பகம் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு புரியும் வண்ணம் சொன்னேன். 




வனம் பற்றியும் அங்குள்ள வன உயிர்கள் பற்றியும் சொல்லிவிட்டு,  இயற்கை தமிழ் காணொளி காண்பித்தேன்.


இந்த இளம் குழந்தைகள் இயற்கையின் பங்கு பற்றி பல கேள்விகளை கேட்டார்கள். பின்னர் "உங்கள் விலங்கை கண்டுபிடிக்க" என்ற விளையாட்டு 5 வெவ்வேறு குழுக்களாக பிரித்து விளையாடப்பட்டது. 





"ஒவ்வொரு இனங்கள் பங்கு" பற்றி தமிழில் ஒரு பாடல் பாடினேன். இது ஒவ்வொரு இனங்கள் பங்கு மற்றும் சுற்று சூழல் முக்கியத்துவத்தை குறித்தது.


மகரந்தசேர்க்கை பற்றி குழந்தைகளுக்கு சுலபமாக புரியும் வண்ணம் "சுவரொட்டி" பயன்படுத்தி, நான் பயனுள்ள மகரந்த சேர்க்கையில் ஈடுபடும் உயிரினங்கள் என்ன என்ன என்று விளக்கினேன். அவை, வண்ணத்து பூச்சிகள் மற்றும் தேனீக்கள் மட்டுமல்ல, குரங்குகள், தோட்டத்தில் உள்ள பல்லி, வெளவால்கள், எலிகள் மற்றும் பறவைகள். மிகச்சிறிய குழந்தைகள் அதிகம் இருப்பதால் "சிறு யானை காணொளியை" காண்பித்தேன்.


மதிய உணவிற்கு பின் ஒரு 'energizer'  என்ற ஒரு சின்ன விளையாட்டை குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தோம். 




பின்னர் பங்கேற்பாளர்கள் ஐந்து குழுக்கள் பிரிக்கப்பட்டு, ஒரு குழு தலைவர் தேர்வுசெய்து, வௌவால் பற்றி செய்திகள் மிக எளிமையாக சொன்னேன். பழந்தின்னி  வௌவால் பற்றி அதிக எளிமையான தகவல்களை சொன்னேன்.




பின்னர் அணி தலைவர் அணி உறுப்பினர்களுடன் விவாதித்து விட்டு, பார்வையாளர்கள் முன்னிலையில் வௌவால் பற்றி மேலும் பல செய்திகளை  சொன்னார்கள்.




 "பையனும் ஒரு ஆப்பிள் மரமும் " கதையை கூறிவிட்டு, பின்னர்  "மனிதர்களுக்கு மரங்களின் பங்களிப்பு" பற்றி தமிழில் ஒரு நாட்டுப்புற பாடல் பாடிவிட்டு,  உணவு சங்கிலி பற்றியும் மற்றும் மாசுபாடு பற்றியும் பேசிவிட்டு, "சேகர் தத்தாத்ரி"- இன் (SOS) தமிழ் வீடியோ ('சோலை காடுகளை காப்போம்') வை போட்டு விட்டு அமர்ந்தேன்.


பின்னர் அனைத்து மாணவர்களும் நமது சுற்று சூழலை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.





ஜூ அவுட்ரீச் (Zoo Outreach)  அமைப்பிலிருந்து வாழ்த்து அட்டைகள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டன. நீலகிரி இயற்கை வரலாறு சங்கம் (NNHS) மற்றும் ஜூ அவுட்ரீச் அமைப்பு (விலங்கு பூங்கா) இணைந்து தேனீ அருங்காட்சியகத்தில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.

************************************************************

அவசியம் பாதுகாக வேண்டியது இரெண்டே இரண்டு விஷயம்தான் ...ஆம்...நம் குழந்தைகளும், நம் காடுகளும்...நம்முடைய ஒவொரு சிறிய முயற்சியும் ஒரு பெரிய மாற்றத்தை விரைவில் ஏற்படுத்தும் ....என்ற நம்பிக்கையில் பிரவின் குமார்.

எல்லா விதத்திலும் எனக்கு உதவிய என் ஆசிரியர்கள் டேனியல் 

மற்றும் மாரிமுத்து அவர்களுக்கு என் நன்றி.