About

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, 11 March 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 17

காகித பாதுகாப்பும் - தனி மனித சூழல் கரிசனமும்
கடந்த பிப்ரவரி 26 அன்று ஒரு நாள் கருத்தரங்கம் Government College of Technology, கோவையில் நடந்தது.
தலைப்பு: "பசுமை தொழில்நுட்பமும், நிலைத்த நீடித்த வாழ்வும்". 
இந்த நிகழ்ச்சி save survive sustain என்ற முத்தான மூன்று வாசகத்துடன் ஆரம்பமானது. இந்த மொத்த கருத்தரங்கத்தின் நோக்கமே காகிதத்தை காப்பதும், பயன்படுத்துவதை குறைப்பதும், அதன் மூலம் நம் காடுகளையும் நமது பல்லுயிரிகளையும் பாதுகாப்பதாகும். மிக முக்கியமான, சிறப்பான, வரவேறக்கதக்க விசயம் என்னவென்றால் இந்த ஒரு நாள் முழுவதும் (இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடங்கி, இன்று வரையிலும்) இந்த நிகழ்சிக்காக எந்த ஒரு காகிதமும் பயன்படுத்தவில்லை என்பதாகும். இது ஒரு பேப்பர் இல்லா (zero paper) நிகழ்வு. பெரும்பாலும் சணல் பைகளும், துணிகளும் பயன்படுத்தி இந்த விழா அரங்கு சிறப்பாக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் பல வகை கைவினை பொருள்களை மாணவிகளும் மாணவர்களும் (நாம் குப்பை என தூக்கி எரியும்) பிளாஸ்டிக் கேன்களில் இருந்து தயாரித்து பார்வைக்கு வைத்திருந்தனர். இது பார்ப்பதற்கு சந்தோசமாகவும் மறுஉபயோகத்தின் அவசியத்தை சொல்வதாகவும் இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பேப்பர் பயன்பாடு மற்றும் காடுகள் பாதுகாப்பு என்ற தலைப்பில் இரண்டு மணிநேர பயிற்சி பட்டறையை நடத்துவதற்காக நான் சென்றிருந்தேன். இந்த பட்டறை மதிய உணவுக்கு பின்பு என்பதால் நான் அதிகம் யோசித்தேன், எவ்வாறு இந்த மாணவர்களின் கவனத்தை வகுப்பின் மீது கொண்டுவர என்று. இதற்காகவே முதலில் காடுகளின் அவசியத்தை குறித்த ஒரு வீடியோவை காண்பித்தேன். பின்பு உயிரின பன்மயம்இந்தியாவில் காடுகள், பல வகை உயிரினங்கள், அவற்றின் எண்ணிக்கைகள், அழிவில் மற்றும் ஆபத்தில் உள்ள தாவர, விலங்குகளையும் சேர்த்து சில அரிய பவளப் பாறைகளையும் பற்றி எடுத்து சொன்னேன்.



பின்பு காகித உற்பத்தியில் நமது சமூக காடுகள் பங்களிப்பை பற்றியும், எவ்வாறு பல வழிகளில் பேப்பர் பயன்பாட்டை குறைக்கலாம் எனவும் சொன்னேன். எவ்வாறு மாற்று வழிகளை யோசிக்கலாம் எனவும் கூறினேன். சில மாணவர்களிடம் கேள்விகளை கேட்டேன்.      



எவ்வாறு காகித தொழிற்ச்சாலை கழிவுகள் நமது மண்ணையும், நமது அடிப்படை குடிநீரையும் அழிக்கின்றன?. மேலும் நமது தாவர, விலங்குகளையும், கண்ணுக்கே தெரியாத நுண்ணுயிரிகளையும் அழிகின்றன எனவும் சொன்னேன்.

அபரிமித காகித பயன்பாடு எவ்வாறு நமது சுற்றுச்சூழலை சிதைக்கின்றன என்றும், எவ்வாறு நேரிடையாகவும் மறைமுகமாகவும் நமது வாழ்வாதாரங்களை பாதிக்கின்றன என்றும் கூறினேன்.  

மறுசுழற்சி செய்த காகிதம் எப்படி மண்ணுக்கும், நமக்கும் நல்லது, எப்படி மறுசுழற்சி செய்த காகிதத்தை, காகிதக்கூழ் தயாரிக்க பயன்படுத்தி சூழல் மாசுபாட்டை குறைக்கலாம் என்றும் சொன்னேன்.




பின்பு ஆய்வகங்களில், நூலகங்களில் எவ்வாறு காகிதத்திற்கு மாற்று வழி உண்டு எனவும் கூறினேன். பின்பு எவ்வாறு மக்களை இந்த தனியார் காடு வளர்க்கும் யோசனையில் சேர்த்துக்கொள்ளலாம் எனவும் சொன்னேன். பின்பு கடைசியாக, ஓவ்வொரு வருடமும்  சுமார் 1.5 லட்சம் மரங்கள் வெறும் tissue பேப்பர் க்காக வெட்டப்படுகின்றன என கூறினேன். நவீன உக்திகள், மாற்று எரிசக்திகள் மற்றும் நுண்ணுயிரிகளை எவ்வளவு சிறப்பாக பயன்படுத்தி இந்த தொழிற்ச்சாலைகளில், சூழலை சிதைக்காத பேப்பரை தயாரிக்க நமது யோசனை என்ன என கேட்டேன்தனிமனித சூழல் கரிசனம் மற்றும் விழிப்புணர்வு மிக அவசியம் என சொல்லி முடித்தேன். 

குறிப்பு: இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவர்க்கும் துணிகளினாலான சான்றிதழ்களை வழங்கியது குறிபிடத்தக்கது.      

Thursday, 6 March 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 15 & 16

கடந்த 23.2.2014 அன்று நிகழ்ந்த இரண்டு நிகழ்ச்சிகளும் சிறப்பாக இருந்தது. முதல் நிகழ்ச்சி ஆய்குடி சிவ சரஸ்வதி வித்யாலாவிலும், இரண்டவது நிகழ்ச்சி  ஆய்குடி அமர் சேவா சங்கத்திலும் நடந்தது. 
முதல் நிகழ்ச்சி: தென்காசி ஆய்குடி சிவ சரஸ்வதி வித்யாலா பள்ளிக்கூடம்
இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 42 மாணவ-மாணவியர் மிகவும் ஈடுபாடாகவும், ஆர்வமாகவும் கலந்துகொண்டனர். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது. இதில் நான், இந்தியாவில் உள்ள பலவகை வன உயிரினங்களை விளக்கும் வண்ணம் பலவகையான active learning tools ஐ பயன்படுத்தி நமது பலவகை விலங்குகளைப் பற்றி விளக்கினேன், பின்பு மழைக்காடுகள் பற்றிய வீடியோ மூலமாகவும், வண்ண அட்டைகள் மூலமாகவும் நமது சுற்றுச்சூழலின் முக்கியதுவத்தை சொன்னேன். 





மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக குழு கலந்துரையாடலும் நடத்தப்பட்டது. இதில் பலரும் பல புதிய தகவல்களை வழங்கி கைதட்டல்களைப் பெற்றனர். மேலும் அவர்களுக்குள்ளே புதைந்துள்ள படைப்பு திறன் மற்றும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்ததை இந்த மூன்று மணி நேரத்தில் கண் கூடாகக் காண முடிந்தது. கடைசியாக இரண்டு மாணவர்கள் இந்த நிகழ்ச்சி எவ்வாறு அவர்களுக்கு இருந்தது என்று அனைவரின் முன்பும் சொல்லி கைதட்டல்களை பெற்றனர். அங்குள்ள பள்ளி ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சிக்கு உதவினர். அப்படியே அமர்சேவா சங்கத்தின் நிர்வாகி திரு.ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்து விட்டு வந்தேன். அவர்களுக்கு என் நன்றிகள். இந்த மாணவர்களை மேலும் மேலும் ஊக்குவித்தால் நிச்சயம் இவர்களால் அறிவியலில் மிக சிறப்பான இடத்தை அடைய முடியும்.   

இரண்டவது நிகழ்ச்சி: வௌவால்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் புகைப்பட கண்காட்சி. 
இடம்: அமர் சேவா சங்கம், ஆய்குடி, தென்காசி.
இந்த நிகழ்ச்சி வௌவால்கள் புகைப்பட கண்காட்சியுடன் துவங்கியது. கண்காட்சியை திருமதி. G.S.விஜய லக்ஷ்மி அவர்கள் திறந்து வைத்து பேசிவிட்டு வௌவால்கள் படங்களை பார்த்து விட்டு சென்றனர்.  பின்பு நான் இந்த சங்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு வௌவால்கள் பற்றிய வகுப்பை துவக்கினேன். நான் இதில், வௌவால்கள் என்பவைகள் பாலுட்டி வகையை சேர்ந்தவைகள்; உலகத்தில் இவை மட்டும்தான் பறக்கும் பாலுட்டிகள்உலகில் நான்கில் ஒரு பங்கு பாலூட்டிகள் வௌவால் போன்ற செய்திகள் அல்லாமல் மேலும் கீழ் காணும் பலவித செய்திகளையும் மிக சுலபமாக புரியும் வண்ணம் விளக்கினேன். 





*** வௌவாலில் இரண்டு வகை உள்ளது, 1. பழம்தின்னி வௌவால்கள் 2. பூச்சிஉண்ணும் வௌவால்கள்
*** பூனையை போல இந்த வௌவால்கள் தன்னை தானே சுத்தம் செய்துகொள்ளும்
*** இந்த உலகில் சுமார் 50 மில்லியன் வருடமாக இந்த வௌவால்கள் உள்ளது. 
*** கடந்த சில வருடமாக வேகமா அழியும் காடுகளும், சாலையோர மரங்களும் இந்த வௌவால்கள் எண்ணிக்கை குறைவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. 
*** மேலும் பருவநிலை மாற்றமும், வாழிட அழிப்பும் (கோவில்களிலிருந்து வௌவால்கள் துரத்தத்படுதல்) ஒரு காரணமாகும் 
*** வௌவால்கள் கூட்டம் கூட்டமாக வாழும் சமுதாய விலங்கு. 
*** நாம் பெருமைப்படும் விஷயம் என்னவென்றால், நம்மிடையே இந்த வௌவால்கள் இருப்பதுதான். ஏனெனில் இந்த வௌவால்கள் மனிதனுக்கும், இந்த சூழலுக்கும் அதிகமான நன்மைகளை செய்கிறது.
*** இந்த வௌவால்கள் தன் எடையை விட மூன்று மடங்கு எடை உணவை உண்ணும்.
*** வௌவால்கள் முப்பது வருடம் வரை வாழும் 
*** Bumble Bee Bat, இது உலகத்திலே மிக சிறிய வௌவால். இது தீப்பெட்டிகுள் செல்லும் அளவு சிறியது. 
*** வயல்வெளிகள், விளைநிலங்கள், தோட்டம் போன்ற இடங்களில் உள்ள பூச்சிகளை பிடித்து உண்ணும். 
*** இந்த அதிசய பாலுட்டிகள் ஒரு மணிநேரத்துக்கு சுமார் 600 - 1000 பூச்சிகளை பிடித்து உண்ணும். 
*** இவை விதை பரவலிலும், மகரந்த சேர்க்கையிலும் மிகச் சிறப்பான பங்கு வகிக்கிறது.
*** பல நாடுகளில் வௌவால்கள் நல்ல சகுனத்தின் அடையாளமாக உள்ளது
*** உலகில் உள்ள பெரிய வௌவாலின் இறக்கை அளவு ஆறு அடி ஆகும் 
*** உலகத்தில் மொத்தம் 1116 வகை வௌவால்கள் உள்ளது, அதில் 117 வௌவால்கள் இந்தியாவில் உண்டு. 

இந்த குழந்தைகளுக்கு காட்டுயிர் மற்றும் உலகின் பெரிய வௌவால் வீடியோவை காட்டினேன். அவர்களில் பலபேர் என்னிடம் சொன்னார்கள், நீங்கள் வகுப்பில் பேசியதைவிட வீடியோ மூலமாக சொன்னவை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது என்று. இந்த மாணவ மாணவிகள் பலரும் மிகச் சிறப்பான உற்று நோக்கும் திறம் உள்ளது. 
கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை சூழல் மேல் அக்கறை உள்ள சிறந்த குழந்தைகளாக மாற்றி விட வேண்டும் என்பதுதான் என் ஆசை. 

நன்றிகள்:
இந்த இரண்டு நிகழ்ச்சியும் அனைவரின் ஒத்துழைப்போடும் மிக சிறப்பாக முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்காக எனக்கு உதவ என் நண்பன் மாரி முத்துவும் வந்தது மகிழ்ச்சியை தந்தது. இரண்டு நிகழ்சிகளும் சிறப்பாக நடக்கவும் எல்லா வித உதவிகளையும் அமர் சேவா சங்கமும், உயர் திரு. ராமகிருஷ்ணன் அய்யாவும் (சிவ சரஸ்வதி வித்யாலயா) செய்திருந்தார்கள். நன்றிகள். வௌவால் புகைப்படங்களை நமக்காக இலவசமாக, அச்சு செய்து வழங்கிய என் நண்பன் உயர் திரு. ஹரி பிரதான் அவர்களுக்கும் என் நன்றிகள்.
நமது சிறிய முயற்சியும் நிச்சயம் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரலாம் ! 

பிரவின் குமார் 
கோயம்புத்தூர்
Save nature otherwise no future

Monday, 3 March 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள்: 14
விந்தை உலகம்: 
காட்டு எலிகளும் (Wild rodents)  முள்ளெலிகளும் (Hedgehogs) 

கடந்த 9/2/2014 அன்று மாலை, ஒலிப்பதிவிற்க்காக நான் திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலையத்திற்கு சென்றிருந்தேன். வார வாரம் புதன் கிழமைகளில் காலையில் ஒலிபரப்பாகும் விந்தை உலகம் நிகழ்ச்சியில் எனது கருத்துகளை சொல்வதற்காக சென்றிருந்தேன். காட்டு எலிகளை பற்றியும், முள்ளெலிகளை பற்றியும் தான். இந்த நிகழ்ச்சியில் அழிவில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் பல சிறிய பாலுட்டிகளில் ஒன்றான காட்டு எலிகளை பற்றியும், இந்த காட்டு எலிகளின் முக்கியதுவத்தை பற்றியும், நமது நாட்டில் உள்ள மூன்று வகையான முள்ளெலிகளை பற்றியும் மிகக்குறிப்பாக நமது பகுதியில் மட்டுமே காணக்கூடிய தென் இந்திய முள்ளெலிகள் பற்றியும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டேன். இதில் பல தகவல்கள் மிகவும் அரியது மற்றும் கேட்கும் வாசகர்களுக்கு புதிது. இந்த நிகழ்ச்சிக்காக என்னை அழைத்த உயர்திரு. திருமலை நம்பி அவர்களுக்கு என் நன்றிகள். மிக விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என நினைக்கிறன்.  




ஏன் எலிகளை பற்றி


2011 முதல் 2020 வரை இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவில் பலவகையான தாவர விலங்குகள் மிக விரைவில் பூண்டோடு அற்று போகலாம் (Extinction) என பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்திருகின்றது. அதனால், மிக வேகமாக அழிவை நோக்கி உள்ள அதிகம் ஆராய்ச்சி செய்யபடாத மிக சிறிய  இந்தியப் பாலுட்டிகளை பற்றி பாமர மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக இந்த நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தேன்.



நன்றிகளுடன் 
பிரவின் குமார் 

ANIMAL WELFARE FORTNIGHT PROGRAM 2014.

தொடரும் நம் சூழல் பயணங்கள்: 13
ANIMAL WELFARE FORTNIGHT PROGRAM 2014.

கடந்த 31/1/2014 அன்று வெள்ளிக்கிழமை animal welfare fortnight 2014 நிகழ்சிக்காக GRG polytechnique கல்லூரிக்கு சென்றிருந்தேன். இந்த நிகழ்ச்சி இரண்டு நிகழ்வாக நடந்தது.  1. animal welfare fortnight பேச்சு 2. வினாடி வினா போட்டி. 

1. கல்லூரி முதல்வரை சந்தித்துவிட்டு நான் செமினார் ஹாலுக்கு சென்றேன். முதலில் என் அலுவலகத்தை பற்றி சொல்லிவிட்டு, ஏன் சனவரி 14 - 31 வரை animal welfare fortnight கொண்டாட வேண்டும் என சொல்லிவிட்டு வியத்தகு காட்டு விலங்குகள், அதிசய வீட்டு விலங்குகள் என பல தகவல்களை சொன்னேன். 

பின்பு மேன்மை மிகு மேற்குத் தொடர்ச்சிமலை பற்றியும் அங்குள்ள பல்லுயிர் சூழல் பற்றியும் சொன்னேன். பின்பு இந்தியாவில் இருந்து அழிந்துபோன (பூண்டோடு அற்று போன) சில விலங்குகளை பற்றியும் கூறினேன். நாகரீக மாற்றம் மற்றும் பேராசை எவ்வாறு நம் சூழலைக் கெடுக்கிறது, நம் பலவகைப்பட்ட விலங்குகளை அச்சுறுத்துகிறது எனவும் விளக்கினேன். பின்பு ஒரு சிறிய வீடியோவை காட்டிவிட்டு, save nature otherwise no future என்ற எழுச்சிமிகு வார்த்தைகளுடன் முடித்துக்கொண்டேன்.    

2. ஏற்கனவே பிரிக்கப்பட்ட 4 பேர் கொண்ட 8 குழுக்களின் மத்தியில் 'தாவர-விலங்கு பற்றிய வினாடி வினா' நிகழ்ச்சியை நடத்தினேன். இந்த போட்டி நான்கு சுற்றுக்களாக நடந்தது. இதில் எல்லா குழுக்களும் மிக உற்சாகமாக கலந்துகொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அட்டகாசமாக பதிலளித்தனர்.  






இதில் 55 பாயிண்ட்களுடன் giraffe குழு முதலிடம் பெற்றது. முதல் இரண்டு இடங்களை பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கியது கல்லூரி நிர்வாகம். அனைத்து வகுப்பாசிரியர்களும் மாணவர்களை உற்சாகப்படுத்தினார்கள். 




இந்த வகுப்பு, அவர்களுக்கு விலங்குகளை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்கும் என நம்புகிறேன்.  
அனைவர்க்கும் நன்றிகளை சொல்லிவிட்டு திரும்பி வந்தேன்.

என்றும் 
பிரவின்




Wednesday, 5 February 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் XII : சிறு பாலுட்டிகள் - விழிப்புணர்வு நிகழ்ச்சி - ஆழ்வார்க்குறிச்சி

தொடரும் நம் சூழல் பயணங்கள் XII
சிறு பாலுட்டிகள் - விழிப்புணர்வு நிகழ்ச்சி
கடந்த 13/1/2014 அன்று, மூன்று மணிநேர சிறிய பாலுட்டிகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்க்குறிச்சி - சிவசைலத்தில் உள்ள "ஔவை ஆசிரமத்திற்க்கு" சென்றிருந்தேன். நான் படித்தது ஆழ்வார்க்குறிச்சியில் உள்ள ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரியில் தான். வெகு நாட்களுக்கு பிறகு அந்த கல்லூரி சாலையும், அங்குள்ள சாலை ஓர மரங்களும் என் கல்லூரி ஆசிரியர்களையும், என் நண்பர்களையும் நினைவூட்டியது.. இந்த நினைவுகளுடனே நான் கல்லூரியைக் கடந்து ஔவை ஆசிரமத்தை அடைந்தேன். சரியான நேரத்திற்கு நான் சென்றுவிட்டேன். அன்றுதான் எனக்கு தெரியும், இந்த ஆசிரமம் காந்தி கிராம அறக்கட்டளையின் நேரடி கட்டுபாட்டில் இயங்குகிறதென்று…  ஆசிரியையை சந்தித்துவிட்டு நான் வகுப்பிற்குள் சென்றேன். அனைவரின் அறிமுகத்திற்கு பின்பு மிக எளிமையான பாலுட்டிகள் பற்றிய விளக்கத்துடன் வகுப்பு ஆரம்பமானது. 





அவர்கள் தினமும் காணக்கூடிய விலங்குகளை கேட்டு தெரிந்து கொண்டேன். இதில் பலர் பறவைகளையும் பாலுட்டிகளையும் சேர்த்து, மிக ஆர்வமாக மைனா, கிளி, குருவி, நாய், எறும்பு, முயல், வௌவால் எனச் சொன்னனர். பெரிய மற்றும் சிறிய பாலுட்டிகள் பற்றி உதாரணங்களுடன் விளக்கினேன். சற்று வகுப்பு அமைதியான உடன் "வங்காரி மாதாய்" வாழ்கையை ஒரு சிறிய கதைபோல சொல்லிவிட்டு, ஒரு சிட்டு குருவியின் கதையை கூறினேன். பின்பு ஒரு "சுற்றுச்சூழலும் விலங்குகளும்" என்ற ஒரு வீடியோவைக் காட்டிவிட்டு "attitude assessment" என்ற செயல்பாட்டை வகுப்பிறகுள் செய்தேன். அனைவரும் இதில் ஆர்வமாக கலந்துகொண்டு சிறிய பாலுட்டிகள் பற்றி நேர்மறை, எதிர்மறை கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.  





மீண்டும் ஒருமுறை சிறிய பாலுட்டிகளைப் பற்றி உதாரணங்களுடன் சொன்னேன். பின்பு அங்குள்ள அனைவரையும் ஏழு குழுக்களாக பிரித்துவிட்டு, குழுவிற்கொரு குழுத் தலைவரையும் நிர்ணயத்துவிட்டு தொடர்ச்சியாக முயல், காட்டு அணில், வௌவால், முள்ளெலிகள் குறித்து பல வியக்கத்தக்க தகவல்களை சொன்னேன்.  பத்து நிமிட இடைவெளிக்கு பிறகு ஒவ்வொரு குழுத் தலைவரும் நான் சொன்ன தகவல்களை திரும்ப சொல்லவேண்டும். எந்த குழு மிக அதிக அளவு தகவல்களை கிரகித்துகொண்டு  மிக சிறப்பாக சொல்கிறார்கள் என்று பார்ப்பதற்கும், அவர்களின் புரிந்துகொள்ள்ளும் திறனையும் தெரிந்து கொள்வதற்காக இதை செய்தேன். இதில் மூன்று குழுக்கள் மிக சிறப்பாக பல செய்திகளை மழைச் சாரல் போல தகவல்களை சொன்னார்கள். கைத்தட்டல்களை பெற்றார்கள்.







பின்பு வௌவால் பற்றிய ஒரு "வரைபட நிகழ்வை" பதிமூன்று குழுக்களுக்கிடையில் செய்தேன். இதிலும் எல்லாக் குழுக்களும் மிக சிறப்பாக கலந்துகொண்டு தங்கள் பார்த்த சிறிய பாலுட்டிகளை வண்ண படங்களாக வரைந்து அனைவரின் பாரட்டையும் பெற்றனர். குறிப்பாக மிக அழகான முயல், எலி, வௌவால்களை வரைந்து, வர்ணம் செய்து அசத்தியிருந்தனர். இந்த உயிரினங்களின் சூழல் நன்மையை சொல்லிவிட்டு சிறப்பாக ஓவியம் வரைந்த முதல் மூன்று குழுக்களுக்கு பரிசுகளை ஆசிரியை வழங்கினார்கள். கடைசியாக, அனைவரும் எழுந்து நின்று, உயிரினங்கள் பாதுகாப்பு பற்றி தொடர் உறுதிமொழி செய்துகொண்டோம். 

சில புரிதல்கள்:
1.பெருமபாலான மாணவர்கள் அவர்கள் வாளகத்தில் உள்ள பழந்தின்னி வௌவால் பற்றி கூறினார்கள். அதை அவர்கள் பத்திரமாக பாதுகாப்போம் என்றும் சொன்னார்கள்.
2. மாணவிகள் பேசும்போது 'இந்த சிறிய வௌவாலை' நம்ம friend ஆக ஏத்துக்குவோம் என்றாங்க.
3. ஒரு குட்டி பையன் மிக சாதாரணமாக "எல்லா உயிரினமும் இந்த காட்டுல இருந்தாதான் பாக்குறதுக்கு அழகா இருக்கும்" என்றான்.
4. மேலும் சிலர் பறவைகள், பூச்சிகள், அணில்கள் சூழ்ந்த இந்த காட்டில் வாழ்வதே சந்தோசமாக உள்ளதாக கூறி சென்றார்கள்.
5. வௌவால் இவ்வளவு நன்மை செய்கிறதா என்று ஆச்சர்யத்தோடு சொன்னாள் ஒரு சிறுமி.
6. இந்த வகுப்பு அவர்களுக்கு புரிந்துகொள்ள மிக சுலபமாக உள்ளதாகவும் கூறினார்கள்.
நான் பலவிசயங்களை இந்த கிராமத்து குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொண்டேன். மிகக் குறிப்பாக கேள்வி கேட்கும் திறன். அதாவது அவர்கள் படித்த கிளாமிடோமொனஸ், பூஞ்சான்கள், அமீபா பற்றி இந்த வகுப்போடு இணைத்து பல கேள்விகளைக் கேட்டனர். இந்த வகுப்பு மிக சிறப்பாக முடிந்தது. அவர்களின் சூழல் அக்கறையும், அவர்களை சுற்றி உள்ள விலங்குகளின் மேல் உள்ள கவனமும், நிச்சயம் அவர்களின் அடிப்படை அறிவியல் ஞானத்தை வளர்க்கும். சரியான வழிகாட்டினால், அறிவியலில் மிக சிறப்பானதொரு வளர்ச்சியை இவர்களால் எட்ட முடியும்.
இந்த நிகழ்சிக்காக எனக்கு உதவிய என் ஆசிரியர்கள் டேனியல் மற்றும் மாரிமுத்து அவர்களுக்கு நன்றி. அனைவரின் ஒத்துழைப்புடன் இந்த வகுப்பு மிக சிறப்பாக நடந்து முடிந்தது.

அன்புடன்  
பிரவின் குமார்



   



Friday, 31 January 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் XI
நன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 

திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டாவது சுற்றுச்சூழல் பரப்பு மையம் தென்காசி கல்வி மாவட்டத்தில் உள்ள மஞ்சம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12.01.2014 அன்று திறக்கப்பட்டது. தில் திரு. மல்லேசப்பா (சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு அரசு), மாவட்ட கலெக்டர் திரு. கருணாகரன் மற்றும் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் திரு. செந்தூர் பாண்டியன் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் பரப்பு மையத்தை திறந்து வைத்தனர்.   இந்த நிகழ்ச்சியை திருமதி. G..S. விஜயலட்சுமி அவர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.




இந்த பரப்பு மையம் திறக்கப்பட்ட நாளே, முதல் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்சிக்காக நான் சென்றிருந்தேன். சுமார் 22 மாணவ-மாணவிகள், 5 ஆசிரியர்கள் இருந்தனர்.  டாக்டர். G..S.. விஜயலட்சுமி அவர்கள் அறிமுக உரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. நான் எப்போதும் போல அனைவரின் பெயர், வகுப்புகளை கேட்டு தெரிந்து விட்டு, அவர்கள் பார்த்த நன்னீர் உயிரினங்களை கேட்டேன். பின்பு மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள நன்னீர் ஆதாரங்களையும், இங்குள்ள பலவகைப்பட்ட தாவர, விலங்குகளையும் பற்றிச் சொனேன். நன்னீர் பல்லுயிரியம் என்றால் என்ன? என்பதை சொல்லிவிட்டு "attitude assessment" என்ற நிகழ்வை நான் வகுப்பிற்கு வெளியில் நடத்தினேன். நன்னீர் சூழல் பற்றியும், நம் மலைகளை பற்றியும் கேட்கப்பட்ட பலவகைப்பட்ட கேள்விகளுக்கு இந்த குழந்தைகள் மிக அழகாக பதிலளித்தனர். பின்பு ஒவொரு உயிரினத்தில் முக்கியதுவத்தை விளக்கும் பொருட்டு "உசந்த மரத்தாலே" என்ற நாட்டுப்புறப் பாடலை பாடிவிட்டு பங்கேற்பாளர் அனைவரையும் ஐந்து குழுக்களாக பிரித்துவிட்டு 'வரைபடத்தைச் சேர்த்தல்' என்ற நிகழ்வை நடத்தினேன். இதில் ஓவ்வொரு குழுக்களிடத்திலும் மேற்குத்தொடர்ச்சி மலையின் பல்லுயிர் செறிவு பகுதியின் வரைபட துண்டுகளை கொடுத்து இணைக்க சொன்னேன். மேலும் இந்த வரைபடத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை உள்ள ஆறு மாநிலங்களின் பெயர்களை எழுத சொன்னேன். எல்லாக் குழுக்களும் மிக சிறப்பாக இணைத்திருந்தனர். பின்னர் அனைத்து குழுக்களுக்கும் "ஆறுகள்" துண்டாக்கபட்ட வரைபடத்தை கொடுத்து இணைக்கச் சொன்னேன். அனைவரும் வரைபடத்தை இணைந்தனர். இதில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகளின் பெயர்களை எழுத சொன்னேன். மிக சிரமப்பட்டு எழுத முயற்சி செய்தனர். நான் உதவி செய்து எழுதச் செய்தேன். பின்னர் நான் மேற்குத் தொடர்சிமலையில்  உற்பத்தியாகும் ஆறுகளின் பட்டியலை கூறினேன்.



பின்னர் இந்த மலையில் உள்ள பாலுட்டிகள், பறவைகள், ஊர்வன, இருவாழ்விகள் மற்றும் மீன்களின் எண்ணிக்கையையும், எவை எவை நம் மலையில் மட்டுமே காணக்கூடியவை என சொன்னேன்.  நன்னீர் வகைகளை பற்றி சொல்ல அட்டைகளை பயன்படுத்தினேன். பின்பு உயிரினங்களின் வகைப்பாடு  என்ற செயல்முறையையும் அட்டையை பயன்படுத்தி நான்கு குழுக்களுக்கிடையில் வெற்றிகரமாக செய்து முடித்தேன். பின்பு இன்றைய வகுப்பில் பார்க்கபோகிற நான்கு முக்கிய குழுக்களான 1. நன்னீர் மீன்கள் 2. தாட்டான்கள் 3. நத்தைகள் 4. நன்னீர் தாவரங்கள். பின்பு ஏன் நன்னீர் உயிரினங்களை பாதுகாக்கணும் என்றும், எவை இந்த உயிரிகளை அச்சுறுத்துகின்றன என்றும் சொன்னேன்.  




அப்புறமாக, நன்னீர் மீன்கள், தட்டான்கள் படம் போட்ட போஸ்டர் காட்டி அவர்கள் பகுதியில் அவர்கள் பார்த்த நன்னீர் உயிர்கள் பெயர்களை சொன்னார்கள்.  
பின்பு விலங்கு வெளிக்கள அமைப்பு வழங்கிய நன்னீர் உயிரின தகவல் பெட்டகத்தை  அனைவர்க்கும் வழங்கினேன். அதில் உள்ள புத்தகத்தில் உள்ள மீன்கள் மற்றும் தட்டான்களின் வாழ்க்கை சுழற்சியை படிக்க சொன்னேன். நான்  கருத்துக்களை பகிர்ந்து விட்டு பின்பு அனைவரும் தகவல் பெட்டகத்தில் உள்ள "ராக்கியை" அருகில் உள்ளவரின் கைகளில் கட்டி விட்டு, எழுந்து நின்று நன்னீர் உயிரினங்களையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொன்டனர்.



இறுதியாக G..S.. விஜயலட்சுமி அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள். குழு நிழற்படத்துடன் இந்த நிகழ்ச்சி இங்கு நிறைவு பெற்றது. 



எல்லா குழந்தைகளும் மிக ஆர்வமாக கலந்து கொண்டனர். மிகக் குறிப்பாக இரண்டு குழந்தைகள் அதிகமாக பேசியும், கேள்விகள் கேட்டும் மிக உற்சாகமாக கலந்துகொண்டனர்.
சிறப்பு நன்றி: Zoo Outreach Organization இந்த நிகழ்ச்சிக்காக நன்னீர் தகவல் பெட்டகத்தையும், வண்ண போஸ்டர்களையும் வழங்கி உற்சாகப்படுத்தியது. இவர்களின் ஆதரவும், உத்வேகமும் இன்னும் நம் உயிரினங்களை பாதுகாக்க பல நிகழ்ச்சிகளை வடிவமைக்க உதவும்.    
மேலும் இந்த நிகழ்ச்சிக்காகவே வெகு தொலைவில் இருந்து வந்து எனக்கு உதவிய என் நண்பர்கள் திரு. மாரி முத்து மற்றும் திரு. செல்வம் அவர்களுக்கு நன்றி.

சில பகிர்தல்கள்: (மாணவிகள் சொன்னது)
1. இந்த வகுப்பு எங்களுக்கு மேற்குத்தொடர்ச்சி மலையை பற்றி பல புதிய தகவல்களை வழங்கியது.
2. இது நம்ம சயின்ஸ் கிளாஸ் போல போர் அடிக்க வில்லை. வகுப்பை கவனிக்கவே ஆர்வமாக இருந்தது.
3. மிக எளிமையான உதாரணங்களுடன் நன்னீர் உயிரினங்களைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
4. வரைபட activity புரிய மிக சுலபமாக இருந்தது.

எல்லாம் முடித்துவிட்டு கிளம்பும் முன் பல மாணவிகள் என்னிடம் கேட்டனர் "சார், அடுத்த வகுப்பு எடுக்க எப்போ சார் வருவீங்க? நான் சீக்கிரமே…………… எனச் சொல்லிவிட்டு, G..S. விஜயலட்சுமி அவர்களை சந்தித்துவிட்டு கிளம்பினேன்.    

நன்றியுடன்

பிரவின் குமார்

Thursday, 23 January 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் X: பள்ளியர் பழங்குடி குழந்தைகளுடன் ஒரு நாள்



தொடரும் நம் சூழல் பயணங்கள்
பள்ளியர் பழங்குடி குழந்தைகளுடன் ஒரு நாள்:

கடந்த நவம்பர் 17 அன்று "பாலுட்டிகள்" குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக கொடைக்கானலில் உள்ள வானவில் பழங்குடி குழந்தைகள் காப்பகத்திற்கு சென்றிருந்தேன். பங்கேற்பாளர்கள் அனைவரும் பள்ளியர் பழங்குடிகளின் குழந்தைகள் ஆகும். முதலாவதாக அனைவரின் பெயரையும் நான் ஞாபகப்படுத்திகொண்டு, கடந்த முறை நான் வௌவால் வகுப்பில் கற்றுக் கொடுத்தலில் இருந்து சில கேள்விகளை கேட்டு, பின்னர் இன்று என்ன என்ன கற்றுக்கொள்ள போகிறோம் (குரங்குகளை பற்றி) என்பதை சொன்னேன். கடந்த முறையை விட இந்த முறை குழந்தைகள் கற்றுக்கொள்ள ஆர்வமாகவும், நிதானமாகவும் இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. 



முதலில் அனைவர்க்கும் பாலுட்டிகள் குறித்த ஒரு விளக்கத்தை சொல்லிவிட்டு அவர்களை சுற்றி உள்ள பாலுட்டிகள் பெயர்களை சொல்ல சொன்னேன்.






பலவகை பாலுட்டிகள் பிரிவை சொல்லிவிட்டு அவைகளில் சூழல் முக்கியத்துவத்தை சொன்னேன்.   
பின்னர் குரங்கினங்களை பற்றியும், இந்தியாவில் மட்டுமே உள்ள குரங்குகள் பற்றியும், நம் மேற்கு தொடர்ச்சிமலையில் உள்ள குரங்குகளை பற்றி நிறைய தகவல்களை சொன்னேன். 

பின்பு அனைவரையும் எட்டு குழுக்களாக பிரித்து, குரங்குகள் பற்றி வர்ணம் செய்தல் செயல் முறையை செய்தேன். அனைவரும் கொடுக்கப்பட்டுள்ள பலவகை கறுப்பு வெள்ளை குரங்கு படங்களுக்கு வண்ணம் செய்து, அனைவர் முன்னாலும் காண்பித்து கைதட்டகளை பெற்றனர். 



அப்புறமாக எப்படி குரங்குகள் மரத்தை நாடியுள்ளன என்றும், எவ்வாறு காடு அழிப்பு நம் குரங்குகளை அழிவிற்கு காரணமாகிறது என்றும் சொல்லிவிட்டுசிறிய வீடியோவைக் காட்டி விட்டு, காடு அழிப்பதால் எப்படி விலங்குகள் பாதிப்பு அடைகிறது என்பதை ஒரு விளையாட்டு மூலம் நடத்திவிட்டு, குரங்குகளை பற்றி சில சிறப்புகளை குழுவாக பிரித்து வாசிக்க சொன்னேன்.

கடைசியாக அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டோம். தோழர் அசோக் ராஜன் நன்றி உரையுடன் நிகழ்ச்சி முடிந்தது.