About

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday, 21 April 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 21

வௌவால் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 
மற்றும் 
புகைப்பட கண்காட்சி - நானல் குளம் 

இந்த ஏப்ரல் 7ம் தேதி அன்று வௌவால் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் புகைப்பட கண்காட்சியை திருநெல்வேலி மாவட்டதில் உள்ள ஆழ்வார்க்குறிச்சிக்கு அருகிலுள்ள நானல் குளம் என்ற கிராமத்தில் நடத்தினேன். இந்த நிகழ்ச்சியை ஏட்ரீ - அகஸ்தியமலை சமுதாயம் சார்ந்த இயற்கைவள பாதுகாப்பு மையம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் பதிமூன்று குழந்தைகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை திரு.மதிவாணன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். முதலில் எப்போதும் போல என்னை பற்றி அறிமுகம் செய்துகொண்டு அவர்களை பற்றி கேட்டேன். அவர்களுக்கு பிடித்த விலங்கு, கடைசியாக பார்த்த விலங்கு, அவர்களின் பெயர் மற்றும் வகுப்பு போன்றவற்றை கேட்டேன். பின்பு வகுப்பறைக்கு வெளியில் attitude assessment என்ற ஒரு நிகழ்வை நடத்தினேன். இதில் காடுகள், விலங்குகள் சார்ந்த கேள்விகளை கேட்டேன், அவர்கள் தரும் பதிலை பொறுத்து அவர்களின் மன நிலையை புரிந்து கொள்ளலாம் என்பதற்காக இந்த ஒரு செயல்பாட்டை வைத்திருந்தேன்.  





பின்பு காடுகள் குறித்தும், உணவு சங்கிலி குறித்தும், பல வகை உயிரினங்கள் குறித்தும் சொன்னேன். அழிந்துவிட்ட விலங்குகளுக்கு சில உதாரணங்களை கேட்டேன். பலரும் டைனோசர் என்று மட்டுமே பதில் சொன்னார்கள். பின்பு அவர்களுக்கு, டூ டூ (DO DO) பறவை பற்றிய ஒரு சிறிய வீடியோ வை காட்டிவிட்டு டூ டூ பறவை எப்படி மொரீசியெஸ் தீவில் இருந்து அளிக்கப்பட்டது என்றும், வேட்டை எப்படி ஒரு பறவையை இப்படி அளித்தது என்றும் சொன்னேன். இந்த பறவை அழிந்ததால், விதை பரவலுக்கும், முளைப்பதற்கும் இந்த பறவையை நம்பியே இருந்த "கல்வரியா" மரமும் எப்படி அழிந்தது என்று சொன்னேன். இந்த பறவையின் எலும்பு கூடு மட்டுமே இப்பொது அருங்காட்சியகத்தில் உள்ளது என்றும் சொன்னேன். 



பின்பு அப்படியே நமது காடுகளின் சூழலுக்குள் அவர்களை திருப்பினேன். அவர்கள் அருகிலுள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் பற்றி  சில தகவல்களை கேட்டேன். பின்பு தமிழ் நாட்டில் இருந்து அழிந்ததாக நம்பப்படும் "கான மயில்" "வரகு கோழி" பற்றி சில தகவல்களை சொன்னேன். பின்பு தங்க பல்லி பற்றியும், களக்காடு தலையணை, நம்பியார் மற்றும் பச்சையாற்றில் உள்ள அரிய மீன் இனங்களை பற்றியும் சுருக்கமாக சொன்னேன். எலிகள், முள் எலிகள், அலுங்கு, முயல் போன்றவை எப்படி நம் பகுதியில் மிக சாதாரணமாக காணப்படுகின்றன என்றும் சொன்னேன். மலை அணில் மற்றும் மர அணில் பற்றியும் சில சேதிககளை சொல்லிவிட்டு, பாலுட்டிகள் என்றால் என்ன என்றும் இந்தியாவில் உள்ள பாலுட்டிகள் எண்ணிக்கை பற்றி கூறினேன். இந்த எண்ணிக்கை ஆம் ..மொத்தம் உள்ள 423 இந்திய பாலுட்டிகளில் 4 இல் 1 பங்கு வௌவால்தான் என சொன்னேன். 115 வௌவால் இனங்கள் இந்தியாவில் உள்ளன என்று வௌவால் பற்றி பேச தொடங்கினேன். 





வௌவால்கள் பற்றிய தகவல்களான அவற்றின் வகைகள், காணப்படும் இடம், கண்பார்வை, எப்படிப் பறக்கிறது, உலகில் பெரிய மற்றும் சிறிய வௌவால், இடப் பெயர்ச்சி, சுற்றுச்சூழலுக்கு வௌவால் செய்யும் நன்மைகள், அழிவிற்க்கான காரணம் மற்றும் மாணவர்கள் எப்படி இந்த சிறிய வௌவால் இனங்களை பாதுகாக்கலாம் என்பன போன்ற அறிவியல் தகவல்களை சுவாரசியமாக சொன்னேன். பின்பு "உலகின் பெரிய வௌவால்" என்ற ஒரு வீடியோவை காட்டினேன். நான் சங்ககிரி மலையில் பார்த்த ஒரு வௌவால் பற்றிய என் அனுபவங்களை கூறினேன். வௌவால் எச்சம் எப்படி உரமாகிறது என்றும் சொன்னேன். பருவ நிலை மாறுபாடு வௌவால் இனங்களின் பறக்கும் திசையையும், ரூஸ்ட்ஐ விட்டு கிளம்பும் நேரத்தையும் எப்படி மாற்றி விட்டன என்றும் சொன்னேன். பின்பு கோவிலில் உள்ள வௌவால் எப்படி வாழிடம் இல்லாமல் மக்களால் துரத்தப்படுகின்றது என்றும் கூறினேன். 


வௌவால்களுக்காக பட்டாசை தியாகம் செய்த கிட்டாம்பளையம் கிராமம் பற்றியும் சொன்னேன். அனைத்து மாணவர்களையும் மூன்று குழுக்களாக பிரித்து குழுவிற்கு ஒரு குழு தலைவரை தேர்ந்தெடுத்தேன். நான் சொன்ன வௌவால் தொடர்பான தகவல்களை குழுத் தலைவர் அனைவரின் முன்பு வந்து பகிர்ந்து கொள்ள வேண்டும். இப்போது Zoo Outreach வழங்கிய வௌவால் தகவல் பெட்டகத்தை வழங்கினேன். மீண்டும் ஒரு முறை விளக்கினேன். தயார் செய்வதற்காக பத்து நிமிடம் வழங்கினேன். ஒவ்வொரு குழு தலைவரும் முன்னால் வந்து அவர்கள் தெரிந்து கொண்ட, புரிந்து கொண்ட வௌவால் பற்றிய செய்திகளை சொல்லிவிட்டு கைதட்டலுடன் அமர்ந்தனர். 






இது முடிந்தவுடன் அடுத்த செயல் முறையாக, ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு வௌவால் கறுப்பு வெள்ளை கோடுகள் உள்ள படங்களை கொடுத்து வர்ணம் (கலர்) செய்யும் செயல் முறையை ஆரம்பித்தேன். அவர்களுக்கு தேவையான பொருள்களையும் வழங்கினேன். இருபது நிமிடங்களுக்குள் மூன்று குழுக்களும் மிக வண்ண மயமாக இந்த வௌவால் படங்களுக்கு வண்ணம் செய்திருந்தார்கள். வண்ணம் செய்த படங்களை அனைவரின் முன்பும் காண்பித்துவிட்டு, இந்த படம் என்ன சொல்கின்றது என்று சொன்னர்கள். மிகப் பெரிய கைதட்டலை அனைவரும் வழங்கினோம். 











சிறிய இடைவெளிக்கு பின்பு "காந்தியடிகளின் சூழல் சிந்தனைகளை" சொல்லிவிட்டு வௌவால் பாதுகாப்பு பற்றிய உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டோம். 



இந்த அறையில் நான் அமைத்திருந்த சிறிய வௌவால் புகைப்பட கண்காட்சியை அனைவரும் பார்வையிட்டனர். ஒரு பெரிய புன்னகையுடன், குழு புகைப்படத்துடனும் இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டேன். கடைசியாக திரு.மதிவாணன் நன்றிகளை தெரிவித்து கொண்டார். 




இந்த நிகழ்ச்சி நான் நினைத்தது போலவே மிக சிறப்பாக முடிந்தது. அனால் ஒன்று …  உலகத்தில் இருந்து மொத்தம் 247 வௌவால் இனங்கள் முற்றிலும் அழிந்து போய்விட்டது என்ற ஒரு செய்தியை சொல்ல மறந்து விட்டேன். 

இந்த குழந்தைகள் இனி வரும் நாட்களில் வௌவால் பற்றிய  தகவல் பரப்பிகளாக இருப்பார்கள்; வௌவால்களை பாதுகாக்கும் இளைய மாணவர் படை இன்று இந்த கிராமத்தில் உருவானது என்று நினைத்து பெருமை பட்டு கொள்ளலாம்.     

இந்த நிகழ்ச்சிக்காக எனக்கு உதவிய திரு.மதிவாணன் அவர்களுக்கு என் நன்றிகள். எனக்காக வௌவால் தமிழாக்கத்தை வழங்கிய திரு. மாரிமுத்து, Zoo Outreach அவர்களுக்கும், எனக்கு ஆலோசனைகளை வழங்கிய ஆசிரியர், முனைவர்.B.A. டேனியல்  அவர்களுக்கும் என் நன்றிகள்.  இந்த நிகழ்சிக்காக தகவல் புத்தகம், கேமரா, எழுது பொருள்கள், போஸ்டர் போன்றவை அளித்த என் Zoo Outreach அலுவலகத்திற்கும் என் நன்றி. அனைவரின் ஒத்துழைப்புடனும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. 

அன்புடன் 
பிரவின் குமார்
கோயம்புத்தூர் 

Saturday, 19 April 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 20

உலக வன நாள் நிகழ்வு: சென்னிமலை, ஈரோடு 

சேலம் வன கோட்ட உலக வன நாள் நிகழ்வுகளை முடித்துக்கொண்டு பேருந்தில் சென்னிமலை கிராமத்தில் உள்ள கஸ்தூரிபா நிதியுதவி தொடக்கப் பள்ளிக்கு சென்றிருந்தேன். இந்த பள்ளி மாணவர்களுக்கு  வனங்களையும், வன விலங்குகளையும், தாவரங்களையும் பற்றி சொல்லவும், கலந்துரையாடவும் சென்றிருந்தேன். சுற்று வட்டாரதிலுள்ள நான்கு பள்ளியில் இருந்து சுமார் 60 மாணவ மாணவியர் இந்த பள்ளிக்கு உலக வன நாள் சிறப்பு நிகழ்ச்சிக்காக வந்திருந்தனர். தோழர். சங்கர் என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள். முதலில் மாணவ மாணவியர்களுக்கு வணக்கத்தை சொல்லிவிட்டு, அவர்கள் பெயர், வகுப்பு, பிடித்த காடு மற்றும் அவர்கள் பார்க்க ஆசைப்படும் விலங்கு போன்றவற்றை கேட்டு தெரிந்து கொண்டேன்.       



முதலில் "இயற்கை அன்னை" வீடியோவை காட்டினேன்.  அவர்களுக்கு அருகிலுள்ள மலைகளை பற்றி கேட்டு தெரிந்துகொண்டேன். சென்னி மலை, சிவன் மலை என பெயர் நீண்டது. . . அப்படியே அவர்கள் அடிக்கடி பார்க்கும் விலங்குகளையும் கேட்டு தெரிந்து கொண்டேன். காடுகள் மற்றும் வன விலங்குகள் மனிதனுக்கு அளிக்கும் பலவித நன்மைகளையும் எடுத்து சொன்னேன். 



அனைவரையும் ஐந்து குழுக்களாக பிரித்து, காடுகள் வகைகள் மற்றும் விலங்குகள் வகைகள் பற்றி சொன்னேன். குழுத்தலைவர்கள் இந்த தகவலை அனைவர் முன்னும் வந்து பகிர்ந்து கொண்டனர். கைதட்டல்களை பெற்றனர். கடைசியாக ஒரு பாடலுடனும், வன பாதுகாப்பு உறுதி மொழியுடனும் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டேன். 




இந்த பள்ளியில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் இங்குள்ள பலவகை பறவைகள், அவர்களை சுற்றி உள்ள விலங்குகள் பற்றிய தெளிவு உள்ளதை கண்டேன். ஒரு மாணவன் என்னிடம் கேட்டான். சார் ..ஸ்விப்ட் பறவை எதுக்கு சார் இவ்ளோ வேகமா பறக்குது. இன்னொருவன், சார் இந்த கொண்டலத்தி பறவை எப்போதுமே இப்படித்தான் நிக்குமா சார். அப்படியே ..எல்லாரும் என்னை சூழ்ந்து கொண்டு அடுத்த முறை வரும் போது கொண்டலத்தி புத்தகம் கொண்டு வாங்க..கடல் ஆமை வீடியோ காண்பிங்கவன விலங்கு CD கொண்டு வாங்க..சிட்டு வௌவால்பற்றி புத்தகம் கொண்டு வாங்க ….  என்று என்னை சற்றே உரிமையுடன் கேட்டார்கள். 




இந்த கிராமத்து குழந்தைகளிடம் உள்ள குதூகலமும், சூழல் கரிசனமும், உயிரினங்களிடத்தில் காட்டும் அன்பும், கேள்வி கேட்கும் தன்மையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 

பள்ளித் தலைமையாசிரியர் எனக்கு "விண்மீன்கள்" என்ற ஒரு தமிழ் புத்தகத்தை பரிசாக வழங்கினார்கள்.   

இந்த நிகழ்ச்சிக்காக என்னை அழைத்த, ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்கள் சங்கர் மற்றும் கார்த்திக் இருவருக்கும் என் நன்றி. இந்த நிகழ்ச்சிக்காக உதவிய பள்ளி ஆசிரியர்கள் மற்றும் என் நண்பர்களுக்கு என் நன்றிகள். என் ஜூ அலுவலகதிற்கும் என் நன்றிகள் ……..

மலைகள் மற்றும் காடுகள் குறித்த ஆசை, வியப்பு, அரவணைப்பு, பாதுகாப்பு என்று அத்தனையுமே இந்த மழலைகளின் வழியாக மானுடம் செழிக்க பெருக வேண்டும் ………

அன்புடன் 

பிரவின், கோயம்புத்தூர்   

Friday, 11 April 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள்: 19

உலக வன நாள் விழா 2014.

ஒவ்வொரு வருடமும் மார்ச் 21ம் தேதி உலக வன நாளாக கொண்டாடப்படுகிறது.  கடந்த மார்ச் 21 அன்று சேலம் வன சரகம் சார்பில்   நடைபெற்ற உலக வன நாள் நிகழ்சிக்காக சேலத்தில் உள்ள சி எஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்றிருந்தேன். இந்த பாலிடெக்னிக் கல்லூரியில் உலக வன நாள் விழா மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி சேலம் குரும்பபட்டி உயிரியல் பூங்கா வன சரகர் திரு.இளங்கோ அவர்களுடைய அறிமுக உரையுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு வனங்கள் பற்றியும், அங்குள்ள சிறப்பான விலங்குகள் பற்றியும், அவற்றின் பாதுகாப்பு குறித்தும் பேச நான் சென்றிருந்தேன். நான் பேசும்போது நமது கிழக்கு தொடர்ச்சி மலைகளை பற்றியும், மிக குறிப்பாக சேர்வராயன் மலையை பற்றியும் அங்குள்ள வன உயிரினங்களை பற்றியும் சொன்னேன். பின்பு காடுகளின் அவசியத்தையும் காடுகளை பாதுகாக்க இளைய சமுதாயத்தின் பங்கு குறித்தும் கூறினேன்.   







பின்பு நமது மலைகளில் காணக்கூடிய வேறு எங்கும் காண முடியாத சில பாலுட்டிகளைப் பற்றி சொன்னேன். வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் காடுகள் வளம் இரண்டும் ஒன்றுக்கொன்று பிணைந்தது என்றும், தனி மனித லாபத்திற்காக எப்படி காடுகள் காணாமல் போகிறது என்றும் சொனேன். சமீபத்திய ஆராய்ச்சிகள், அழிவில் உள்ள பாலுட்டிகள் மற்றும் கவனம் செலுத்த வேண்டிய உயிரினங்கள் பற்றியும் இந்த மாணவர்களிடத்தில் சொன்னேன். பின்பு சேகர் தத்தாத்ரீ அவர்களுடைய "சோலைக் காடுகளை காப்போம்" என்ற வீடியோவை காண்பித்தேன். பின்பு தனிமனித சூழல் அக்கறையும், அனைவரும் தங்களால் முடிந்த வரை இந்த காடுகளையும், வன விலங்குகளையும் பாதுகாக்கலாம் என்று சொன்னேன். பல மாணவர்கள் ஆர்வமாக கேள்விகளை கேட்டனர். இந்த வகுப்பு முழுவதும் ஒரு கலந்துரையாடல் போலத்தான் இருந்தது. கடைசியாக "யானை டாக்டர்" புத்தகத்தில் இருந்து சில வரிகளை சொல்லிவிட்டு அமர்ந்தேன்.                



இந்த நிகழ்ச்சியில் வனவிலங்கு விழிப்புணர்வு குறித்த சிறிய கண்காட்சியையும் வைத்திருந்தேன். மாணவர் ஆர்வமாக பார்வையிட்டு சென்றனர். 



இந்த நிகழ்ச்சிக்காக அனுமதி வழங்கிய திரு.வி.கணேசன் IFS அவர்களுக்கும், எனது ஆசிரியர் சஞ்சய் மொலூர் அவர்களுக்கும் எனது நன்றிகள். இந்த நிகழ்ச்சிக்காக பலவித தகவல்களையும், குறிப்புகளையும் வழங்கிய முனைவர். தானியல் அவர்களுக்கும் என் நன்றிகள்.    

இந்த நிகழ்ச்சி வெறும் நிகழ்ச்சியாக இல்லாமல் இந்த மாணவர்கள் நிச்சயம் இந்த காட்டை பாதுகாக்க எதாவது முயற்சி எடுக்க ஒரு எழுச்சியாக இருந்திருக்கலாம் என நம்புகிறேன்

நமது ஆராய்ச்சிகள் எப்போதும், காடுகள் மற்றும் வன விலங்கு பாதுகாப்பிற்காக !!!!!

பிரவின்
கோயம்புத்தூர்

     

Tuesday, 11 March 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 18

கோத்தகிரி கீ-ஸ்டோன் சமுதாய வானொலி 
தமிழ் நாட்டில் பல சமுதாய வானொலிகள் இருந்தாலும் நமக்கு அருகில் இருக்கும், நன்றாக பழங்குடி மக்களுக்கு தினசரி செய்திகளை வழங்கிவரும் ஒரு வானொலி நமது கோத்தகிரியில் உள்ள கீ-ஸ்டோன் சமுதாய வானொலி.  கடந்த மார்ச் 9 அன்று வனவிலங்குகள் குறித்த பல சுவாரசிய தகவல்களை வழங்குவதற்காக நான் சென்றிருந்தேன்.  இந்த நிகழ்ச்சியில் நான் பலதரப்பட்ட தகவல்களையும், செய்திகளையும் வழங்கினேன். 

1. மேற்குத்தொடர்ச்சி மலை
2. நன்னீர் உயிரினங்கள்
3. அழிவின் விளிம்பில் உள்ள சில பாலுட்டிகள்
4. யானை டாக்டர் புத்தகத்தில் இருந்து சில பக்கங்கள் (நன்றி. தமிழ்நாடு பசுமை இயக்கம்)
5. பாறுகள் - எப்படி குறைந்தன (நன்றி. பாரதிதாசன், அருளகம்)
6. யானைகளிடத்தில் செய் / செய்யாதே (நன்றி. Zoo Outreach)
7. மா. கிருஷ்ணன் வாழ்க்கை குறிப்பு (நன்றி. மழைக்காலமும், குயிலோசையும் புத்தகம்)
8. பெருகும் மக்களும் மாசுபாடுகளும் - குறையும் நிலங்களும், தண்ணீரும் (நன்றி. CPR சுற்றுச்சூழல் மையம், சென்னை)
9. சிறிய விலங்குகள் - கவனிக்கப்படாத உண்மைகள் மற்றும் அதிசயங்கள்
10. ஏன் இப்படி? வௌவால் பாதுகாப்பின் அவசியம்

இதில் நான் சொன்ன எனது தனிப்பட்ட கருத்துகளை தவிர்த்து மற்ற எல்லா கருத்துக்களுக்கும், மேற்கோள்காட்டிய புத்தகங்களுக்கும், அமைப்புகளுக்கும் நான் முறையான நன்றிகளையும், ஆதரவினையும் வானொலியில் சொல்லிவிட்டுத்தான் வந்தேன்.



இந்த நிகழ்சிக்காக என்னை அழைத்த சங்கீதா அவர்களுக்கும், செல்வி நங்கி அவர்களுக்கும் என் நன்றிகள்.    
இப்படிக்கு 
பிரவின் 

தொடரும் நம் சூழல் பயணங்கள் 17

காகித பாதுகாப்பும் - தனி மனித சூழல் கரிசனமும்
கடந்த பிப்ரவரி 26 அன்று ஒரு நாள் கருத்தரங்கம் Government College of Technology, கோவையில் நடந்தது.
தலைப்பு: "பசுமை தொழில்நுட்பமும், நிலைத்த நீடித்த வாழ்வும்". 
இந்த நிகழ்ச்சி save survive sustain என்ற முத்தான மூன்று வாசகத்துடன் ஆரம்பமானது. இந்த மொத்த கருத்தரங்கத்தின் நோக்கமே காகிதத்தை காப்பதும், பயன்படுத்துவதை குறைப்பதும், அதன் மூலம் நம் காடுகளையும் நமது பல்லுயிரிகளையும் பாதுகாப்பதாகும். மிக முக்கியமான, சிறப்பான, வரவேறக்கதக்க விசயம் என்னவென்றால் இந்த ஒரு நாள் முழுவதும் (இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடங்கி, இன்று வரையிலும்) இந்த நிகழ்சிக்காக எந்த ஒரு காகிதமும் பயன்படுத்தவில்லை என்பதாகும். இது ஒரு பேப்பர் இல்லா (zero paper) நிகழ்வு. பெரும்பாலும் சணல் பைகளும், துணிகளும் பயன்படுத்தி இந்த விழா அரங்கு சிறப்பாக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் பல வகை கைவினை பொருள்களை மாணவிகளும் மாணவர்களும் (நாம் குப்பை என தூக்கி எரியும்) பிளாஸ்டிக் கேன்களில் இருந்து தயாரித்து பார்வைக்கு வைத்திருந்தனர். இது பார்ப்பதற்கு சந்தோசமாகவும் மறுஉபயோகத்தின் அவசியத்தை சொல்வதாகவும் இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பேப்பர் பயன்பாடு மற்றும் காடுகள் பாதுகாப்பு என்ற தலைப்பில் இரண்டு மணிநேர பயிற்சி பட்டறையை நடத்துவதற்காக நான் சென்றிருந்தேன். இந்த பட்டறை மதிய உணவுக்கு பின்பு என்பதால் நான் அதிகம் யோசித்தேன், எவ்வாறு இந்த மாணவர்களின் கவனத்தை வகுப்பின் மீது கொண்டுவர என்று. இதற்காகவே முதலில் காடுகளின் அவசியத்தை குறித்த ஒரு வீடியோவை காண்பித்தேன். பின்பு உயிரின பன்மயம்இந்தியாவில் காடுகள், பல வகை உயிரினங்கள், அவற்றின் எண்ணிக்கைகள், அழிவில் மற்றும் ஆபத்தில் உள்ள தாவர, விலங்குகளையும் சேர்த்து சில அரிய பவளப் பாறைகளையும் பற்றி எடுத்து சொன்னேன்.



பின்பு காகித உற்பத்தியில் நமது சமூக காடுகள் பங்களிப்பை பற்றியும், எவ்வாறு பல வழிகளில் பேப்பர் பயன்பாட்டை குறைக்கலாம் எனவும் சொன்னேன். எவ்வாறு மாற்று வழிகளை யோசிக்கலாம் எனவும் கூறினேன். சில மாணவர்களிடம் கேள்விகளை கேட்டேன்.      



எவ்வாறு காகித தொழிற்ச்சாலை கழிவுகள் நமது மண்ணையும், நமது அடிப்படை குடிநீரையும் அழிக்கின்றன?. மேலும் நமது தாவர, விலங்குகளையும், கண்ணுக்கே தெரியாத நுண்ணுயிரிகளையும் அழிகின்றன எனவும் சொன்னேன்.

அபரிமித காகித பயன்பாடு எவ்வாறு நமது சுற்றுச்சூழலை சிதைக்கின்றன என்றும், எவ்வாறு நேரிடையாகவும் மறைமுகமாகவும் நமது வாழ்வாதாரங்களை பாதிக்கின்றன என்றும் கூறினேன்.  

மறுசுழற்சி செய்த காகிதம் எப்படி மண்ணுக்கும், நமக்கும் நல்லது, எப்படி மறுசுழற்சி செய்த காகிதத்தை, காகிதக்கூழ் தயாரிக்க பயன்படுத்தி சூழல் மாசுபாட்டை குறைக்கலாம் என்றும் சொன்னேன்.




பின்பு ஆய்வகங்களில், நூலகங்களில் எவ்வாறு காகிதத்திற்கு மாற்று வழி உண்டு எனவும் கூறினேன். பின்பு எவ்வாறு மக்களை இந்த தனியார் காடு வளர்க்கும் யோசனையில் சேர்த்துக்கொள்ளலாம் எனவும் சொன்னேன். பின்பு கடைசியாக, ஓவ்வொரு வருடமும்  சுமார் 1.5 லட்சம் மரங்கள் வெறும் tissue பேப்பர் க்காக வெட்டப்படுகின்றன என கூறினேன். நவீன உக்திகள், மாற்று எரிசக்திகள் மற்றும் நுண்ணுயிரிகளை எவ்வளவு சிறப்பாக பயன்படுத்தி இந்த தொழிற்ச்சாலைகளில், சூழலை சிதைக்காத பேப்பரை தயாரிக்க நமது யோசனை என்ன என கேட்டேன்தனிமனித சூழல் கரிசனம் மற்றும் விழிப்புணர்வு மிக அவசியம் என சொல்லி முடித்தேன். 

குறிப்பு: இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவர்க்கும் துணிகளினாலான சான்றிதழ்களை வழங்கியது குறிபிடத்தக்கது.      

Thursday, 6 March 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 15 & 16

கடந்த 23.2.2014 அன்று நிகழ்ந்த இரண்டு நிகழ்ச்சிகளும் சிறப்பாக இருந்தது. முதல் நிகழ்ச்சி ஆய்குடி சிவ சரஸ்வதி வித்யாலாவிலும், இரண்டவது நிகழ்ச்சி  ஆய்குடி அமர் சேவா சங்கத்திலும் நடந்தது. 
முதல் நிகழ்ச்சி: தென்காசி ஆய்குடி சிவ சரஸ்வதி வித்யாலா பள்ளிக்கூடம்
இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 42 மாணவ-மாணவியர் மிகவும் ஈடுபாடாகவும், ஆர்வமாகவும் கலந்துகொண்டனர். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது. இதில் நான், இந்தியாவில் உள்ள பலவகை வன உயிரினங்களை விளக்கும் வண்ணம் பலவகையான active learning tools ஐ பயன்படுத்தி நமது பலவகை விலங்குகளைப் பற்றி விளக்கினேன், பின்பு மழைக்காடுகள் பற்றிய வீடியோ மூலமாகவும், வண்ண அட்டைகள் மூலமாகவும் நமது சுற்றுச்சூழலின் முக்கியதுவத்தை சொன்னேன். 





மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக குழு கலந்துரையாடலும் நடத்தப்பட்டது. இதில் பலரும் பல புதிய தகவல்களை வழங்கி கைதட்டல்களைப் பெற்றனர். மேலும் அவர்களுக்குள்ளே புதைந்துள்ள படைப்பு திறன் மற்றும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்ததை இந்த மூன்று மணி நேரத்தில் கண் கூடாகக் காண முடிந்தது. கடைசியாக இரண்டு மாணவர்கள் இந்த நிகழ்ச்சி எவ்வாறு அவர்களுக்கு இருந்தது என்று அனைவரின் முன்பும் சொல்லி கைதட்டல்களை பெற்றனர். அங்குள்ள பள்ளி ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சிக்கு உதவினர். அப்படியே அமர்சேவா சங்கத்தின் நிர்வாகி திரு.ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்து விட்டு வந்தேன். அவர்களுக்கு என் நன்றிகள். இந்த மாணவர்களை மேலும் மேலும் ஊக்குவித்தால் நிச்சயம் இவர்களால் அறிவியலில் மிக சிறப்பான இடத்தை அடைய முடியும்.   

இரண்டவது நிகழ்ச்சி: வௌவால்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் புகைப்பட கண்காட்சி. 
இடம்: அமர் சேவா சங்கம், ஆய்குடி, தென்காசி.
இந்த நிகழ்ச்சி வௌவால்கள் புகைப்பட கண்காட்சியுடன் துவங்கியது. கண்காட்சியை திருமதி. G.S.விஜய லக்ஷ்மி அவர்கள் திறந்து வைத்து பேசிவிட்டு வௌவால்கள் படங்களை பார்த்து விட்டு சென்றனர்.  பின்பு நான் இந்த சங்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு வௌவால்கள் பற்றிய வகுப்பை துவக்கினேன். நான் இதில், வௌவால்கள் என்பவைகள் பாலுட்டி வகையை சேர்ந்தவைகள்; உலகத்தில் இவை மட்டும்தான் பறக்கும் பாலுட்டிகள்உலகில் நான்கில் ஒரு பங்கு பாலூட்டிகள் வௌவால் போன்ற செய்திகள் அல்லாமல் மேலும் கீழ் காணும் பலவித செய்திகளையும் மிக சுலபமாக புரியும் வண்ணம் விளக்கினேன். 





*** வௌவாலில் இரண்டு வகை உள்ளது, 1. பழம்தின்னி வௌவால்கள் 2. பூச்சிஉண்ணும் வௌவால்கள்
*** பூனையை போல இந்த வௌவால்கள் தன்னை தானே சுத்தம் செய்துகொள்ளும்
*** இந்த உலகில் சுமார் 50 மில்லியன் வருடமாக இந்த வௌவால்கள் உள்ளது. 
*** கடந்த சில வருடமாக வேகமா அழியும் காடுகளும், சாலையோர மரங்களும் இந்த வௌவால்கள் எண்ணிக்கை குறைவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. 
*** மேலும் பருவநிலை மாற்றமும், வாழிட அழிப்பும் (கோவில்களிலிருந்து வௌவால்கள் துரத்தத்படுதல்) ஒரு காரணமாகும் 
*** வௌவால்கள் கூட்டம் கூட்டமாக வாழும் சமுதாய விலங்கு. 
*** நாம் பெருமைப்படும் விஷயம் என்னவென்றால், நம்மிடையே இந்த வௌவால்கள் இருப்பதுதான். ஏனெனில் இந்த வௌவால்கள் மனிதனுக்கும், இந்த சூழலுக்கும் அதிகமான நன்மைகளை செய்கிறது.
*** இந்த வௌவால்கள் தன் எடையை விட மூன்று மடங்கு எடை உணவை உண்ணும்.
*** வௌவால்கள் முப்பது வருடம் வரை வாழும் 
*** Bumble Bee Bat, இது உலகத்திலே மிக சிறிய வௌவால். இது தீப்பெட்டிகுள் செல்லும் அளவு சிறியது. 
*** வயல்வெளிகள், விளைநிலங்கள், தோட்டம் போன்ற இடங்களில் உள்ள பூச்சிகளை பிடித்து உண்ணும். 
*** இந்த அதிசய பாலுட்டிகள் ஒரு மணிநேரத்துக்கு சுமார் 600 - 1000 பூச்சிகளை பிடித்து உண்ணும். 
*** இவை விதை பரவலிலும், மகரந்த சேர்க்கையிலும் மிகச் சிறப்பான பங்கு வகிக்கிறது.
*** பல நாடுகளில் வௌவால்கள் நல்ல சகுனத்தின் அடையாளமாக உள்ளது
*** உலகில் உள்ள பெரிய வௌவாலின் இறக்கை அளவு ஆறு அடி ஆகும் 
*** உலகத்தில் மொத்தம் 1116 வகை வௌவால்கள் உள்ளது, அதில் 117 வௌவால்கள் இந்தியாவில் உண்டு. 

இந்த குழந்தைகளுக்கு காட்டுயிர் மற்றும் உலகின் பெரிய வௌவால் வீடியோவை காட்டினேன். அவர்களில் பலபேர் என்னிடம் சொன்னார்கள், நீங்கள் வகுப்பில் பேசியதைவிட வீடியோ மூலமாக சொன்னவை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது என்று. இந்த மாணவ மாணவிகள் பலரும் மிகச் சிறப்பான உற்று நோக்கும் திறம் உள்ளது. 
கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை சூழல் மேல் அக்கறை உள்ள சிறந்த குழந்தைகளாக மாற்றி விட வேண்டும் என்பதுதான் என் ஆசை. 

நன்றிகள்:
இந்த இரண்டு நிகழ்ச்சியும் அனைவரின் ஒத்துழைப்போடும் மிக சிறப்பாக முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்காக எனக்கு உதவ என் நண்பன் மாரி முத்துவும் வந்தது மகிழ்ச்சியை தந்தது. இரண்டு நிகழ்சிகளும் சிறப்பாக நடக்கவும் எல்லா வித உதவிகளையும் அமர் சேவா சங்கமும், உயர் திரு. ராமகிருஷ்ணன் அய்யாவும் (சிவ சரஸ்வதி வித்யாலயா) செய்திருந்தார்கள். நன்றிகள். வௌவால் புகைப்படங்களை நமக்காக இலவசமாக, அச்சு செய்து வழங்கிய என் நண்பன் உயர் திரு. ஹரி பிரதான் அவர்களுக்கும் என் நன்றிகள்.
நமது சிறிய முயற்சியும் நிச்சயம் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரலாம் ! 

பிரவின் குமார் 
கோயம்புத்தூர்
Save nature otherwise no future

Monday, 3 March 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள்: 14
விந்தை உலகம்: 
காட்டு எலிகளும் (Wild rodents)  முள்ளெலிகளும் (Hedgehogs) 

கடந்த 9/2/2014 அன்று மாலை, ஒலிப்பதிவிற்க்காக நான் திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலையத்திற்கு சென்றிருந்தேன். வார வாரம் புதன் கிழமைகளில் காலையில் ஒலிபரப்பாகும் விந்தை உலகம் நிகழ்ச்சியில் எனது கருத்துகளை சொல்வதற்காக சென்றிருந்தேன். காட்டு எலிகளை பற்றியும், முள்ளெலிகளை பற்றியும் தான். இந்த நிகழ்ச்சியில் அழிவில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் பல சிறிய பாலுட்டிகளில் ஒன்றான காட்டு எலிகளை பற்றியும், இந்த காட்டு எலிகளின் முக்கியதுவத்தை பற்றியும், நமது நாட்டில் உள்ள மூன்று வகையான முள்ளெலிகளை பற்றியும் மிகக்குறிப்பாக நமது பகுதியில் மட்டுமே காணக்கூடிய தென் இந்திய முள்ளெலிகள் பற்றியும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டேன். இதில் பல தகவல்கள் மிகவும் அரியது மற்றும் கேட்கும் வாசகர்களுக்கு புதிது. இந்த நிகழ்ச்சிக்காக என்னை அழைத்த உயர்திரு. திருமலை நம்பி அவர்களுக்கு என் நன்றிகள். மிக விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என நினைக்கிறன்.  




ஏன் எலிகளை பற்றி


2011 முதல் 2020 வரை இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவில் பலவகையான தாவர விலங்குகள் மிக விரைவில் பூண்டோடு அற்று போகலாம் (Extinction) என பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்திருகின்றது. அதனால், மிக வேகமாக அழிவை நோக்கி உள்ள அதிகம் ஆராய்ச்சி செய்யபடாத மிக சிறிய  இந்தியப் பாலுட்டிகளை பற்றி பாமர மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக இந்த நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தேன்.



நன்றிகளுடன் 
பிரவின் குமார்